சீக்ரெட் ரூமுக்கு அனுப்பப்பட்டாரா சேரன்? பரவும் தகவலால் ரசிகர்கள் ஹேப்பி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சேரன் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அவர் சீக்ரெட் ரூமுக்கு அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களுக்குமான எபிசோடுகள் சனிக்கிழமையே எடுக்கப்பட்டு விடுகிறது. அந்த வகையில் இன்றைய நாளுக்குமான எபிசோடு நேற்றே எடுக்கப்பட்டுவிட்டது.
அதன்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து சேரன் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

சீக்ரெட் ரூமில் சேரன்?
சேரன் வெளியேற்றப்பட்டதால் அன்புள்ளசேரன் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சேரன் சீக்ரெட் ரூமுக்கு அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓகே சொன்ன சேரன்
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சேரனிடம், சீக்ரெட் ரூமுக்கு செல்கிறீர்களா என கமல்ஹாசன் கேட்டதாகவும், அதற்கு ஓகே சொன்ன சேரன் சீக்ரெட் ரூமுக்கு சென்றதாகவும் தகவல் பரவி வருகிறது.

உண்மையா?
சேரன் சீக்ரெட் ரூமுக்கு சென்றதாக பரவும் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் அது எந்த அளவுக்கு உண்மை என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.

கடைசியாக கஸ்தூரி
பிக்பாஸ் வீட்டில் சீக்ரெட் ரூம் அமைக்கப்பட்டதில் இருந்து யாரும் அங்கு செல்லவில்லை. கடைசியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கஸ்தூரியிடம் சீக்ரெக் ரூமுக்கு செல்கிறீர்களா என கமல் கேட்டார்.

சேரனுக்கு வாய்ப்பு
அதற்கு பெரிய கும்பிடு போட்ட கஸ்தூரி, ஆளவிடுங்க சாமி என்று கூறி சென்றுவிட்டார். இந்நிலையில் அந்த வாய்ப்பு சேரனுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











