Don't Miss!
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- News சமாளிக்கவே முடியல.. மிகப் பெரிய பிரச்சினை! முதல்வருக்கு பறந்த கடிதம்.. அன்புமணி கொடுக்கும் ஐடியா!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
என்னது...குக் வித் கோமாளி சீசன் 3 ஷுட்டிங் நிறுத்தமா...இது தான் காரணமா?
சென்னை : விஜய் டிவியின் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் முதல் இரண்டு சீசன்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து மூன்றாவது சீசன் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியிடப்பட்டது.
குக் வித் கோமாளி சீசன் 2 ல் பங்கேற்ற அஸ்வின், தர்ஷா குப்தா, புகழ், சிவாங்கி, பத்ரலட்சுமி போன்றோர் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்கள் ஆகி விட்டனர். இவர்கள் அனைவரும் தற்போது சினிமாவில் சான்ஸ் கிடைத்து பிஸியாக நடித்து வருகிறார்கள். இதனால் மூன்றாவது சீசன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தள்ளிப் போகிறதா பிக்பாஸ் தமிழ் ஓடிடி...எப்போ ஆரம்பமாகிறது தெரியுமா ?
குக், கோமாளிகள் இவங்க தான்
மூன்றாவது சீசனிலும் சிவாங்கி, மணிமேகலை, சுனிதா, வெட்டிக்கிளி பாலா, மூக்குத்தி முருகன், கலக்க போவது யாரு புகழ் குரேஷி, சூப்பர் சிங்கர் புகழ் பரத் ஆகியோர் கோமாளிகளாக பங்கேற்க போகிறார்களாம். அதே சமயம் பின்னணி பாடகர் ஆன்டனி தாசன், நடிகர் கருணாசின் மனைவி கிரேஸ் கர்ணாஸ், நடிகரும் தயாரிப்பாளருமான மனோபாலா, சார்பட்டா பரம்பரை நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகை வித்யுலேகா ராமன் ஆகியோர் குக் ஆக பங்கேற்க உள்ளனர்.
இவங்களும் இருக்காங்க
இந்த சீசனிலும் செஃப்ஸ் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக செயல்பட உள்ளனர். சிறப்பு விருந்தினர்களாக புகழ் மற்றும் மதுரை முத்து பங்கேற்க உள்ளனராம். இந்த நிகழ்ச்சி எப்போது துவங்கப்பட உள்ளது என தேதி அறிவிக்கப்படாத நிலையில், இந்த நிகழ்ச்சிக்கான ஷுட்டிங் நடத்தப்பட்டு வந்தது.
நிறுத்தப்பட்ட ஷுட்டிங்
முதல் கட்ட ஷுட்டிங் முடிந்து, இரண்டாம் கட்ட ஷுட்டிங் நடத்தப்பட்டு வந்த நிலையில், இரண்டாம் கட்ட ஷுட்டிங் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விரைவில் நிகழ்ச்சி துவங்கும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
Recommended Video
இது தான் காரணமா
எதற்காக ஷுட்டிங் நிறுத்தப்பட்டது என விசாரித்த போது, செட்டில் இருந்த பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாம். கொரோனா வேகமாக பரவி வருவதால் பாதுகாப்பு கருதி ஷுட்டிங் நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.