Kalyana veedu serial: கோபி டபுள் ரோல் பண்றாரா இல்லை.. டபுள் கேமா?
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் முடியும் நேரத்தில் கோபி மறுபடியும் வர்றார். அதுவும் அந்த முக்காடு போட்ட பெண்ணோட.
சூர்யாவின் அப்பாவும், ஸ்வேதாவின் அண்ணனும் கூட ரோஜா மகாபலிபுரம் வந்திருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டு, மகாபலிபுரம் வந்துடறாங்க.
இவங்க வரும்போதே கோபியோட அம்மாவையும் கூட்டிகிட்டு வந்துட்டாங்க. அதனால, இப்போ கல்யாண வீடு சீரியல் குடும்பமே மகாபலிபுரத்தில் முகாமிட்டு இருக்காங்க.

அண்மையில் திருமுருகன்
இயக்குநர் திருமுருகன் மெட்டி ஒலி சீரியலுக்கு பிறகு, எளிமையாக எடுத்தாலும் வேற வேற லொக்கேஷன், அடிக்கடி ஷூட்டிங்குக்கு என்று காட்சிகள் வைத்து வெளியூர்களுக்கு அழைத்துச் செல்வது, அங்கு வெறுமனே சொதப்பல் இல்லாமல் கதையை பரபரப்பு காட்சிகள் மூலம் கொண்டு செல்வது... இதெல்லாம் திருமுருகன் ஸ்பெஷாலிட்டி என்று சொல்லும் அளவுக்கு அவர் கைத்தேர்ந்து விட்டார்.

ஏற்ப கதையின் போக்கை
தனது சூழலுக்கு ஏற்றவாறு கதையின் போக்கை கொண்டு செல்வதிலும் வல்லவர் திருமுருகன். ஏனோதானோவென்று தனது சூழலை எப்போதும் மனதில் வைத்து செயல்படுபவருமில்லை.இதோ இப்போது ஒரு குறும் படம் நடிச்சு தர வேண்டிய சூழலில் இருந்த திருமுருகன்,கதைப்படி தன்னை காணாமல் போகடித்துக் கொண்டார்.

திருமுருகன் என்றாலும்
என்னதான் திருமுருகன் ஸ்டார் காஸ்ட் என்றாலும், உடன் நடிக்கும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையை கொண்டு செல்வார். கதையின் ஒரு சின்ன கதாபாத்திரம் என்றாலும் அதற்கும் சம அளவு முக்கியத்துவம் உள்ள மாதிரி காட்சிகளை அமைப்பார். இப்போது சீரியலில் அடவாடி பெண்களாக எல்லாருமே கலக்கி வருகிறார்கள்.

கோபி ஏன்?
மகாபலிபுரத்தில் கோபின்னு கூப்பிட்ட உடனே என்னவொ எதுவுமே நடக்காத மாதிரி கோபி திரும்பிப் பார்க்கிறார். கூட அந்த பெண் புற முதுகை காமித்தபடியே நிற்கிறது. தான் காணாமல் போனது பற்றி வீட்டில் அத்தனை பேரும் கவலையில் இருப்பாங்கன்னு கொஞ்சம் கூட யோசிக்காமல் கோபி இருக்காரே... ஒரு போன் கூட பண்ணலையே அப்படீன்னா இவர் கோபி இல்லையா?
இதுதான் கடைசியில் தொக்கி நிற்கும் கேள்வி!


Click it and Unblock the Notifications











