Don't Miss!
- News மோடியிடம் கொடுத்த ராஜினாமா கடிதம்? திமுகவை விட்டு விலகியது ஏன்? ரகசியம் உடைத்த பாரிவேந்தர்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
Roja Serial: முதலிரவு நடந்தா உங்களுக்கு என்ன?.. கர்மம் ஃபார்முலாவை மாத்துங்க!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் ரோஜாவுக்கும், அர்ஜூனுக்கும் முதலிரவு நடக்கக் கூடாதுன்னு சாக்க்ஷி, அணு ரெண்டு பேரும் சதி பண்றாங்க
அதோட ,அவங்க ரெண்டு பேரையும் கொலை செய்ய ஆட்களை அனுப்பி வைக்கறாங்க. காட்டேஜ் புக் பண்ணி ஹனிமூன் கொண்டாட வந்திருக்கும் ரோஜா, அர்ஜுனுக்கு இங்கே ஆபத்து காத்திருக்கிறது.
கல்யாணம்னு சொல்றாங்க,ஜோடி சேர்ந்து வாழறாங்க.. காதும் காதும் வச்ச மாதிரி சாந்தி முகூர்த்தமும் நடக்கும்.
Sindhubaadh Review: இது கன்னித்தீவு இல்ல.. ஆனா, அதே சிந்துபாத் தான்.. அப்பா, மகனின் மேஜிக் புதுசு!
அர்ஜுன் ரோஜா
ரோஜா அர்ஜுனுக்கு கல்யாணம் செய்து வச்ச கல்பனா ஹனிமூனுக்கு அனுப்பினால், எல்லாருக்கும் தெரிஞ்சுரும்னு சென்னையிலேயே காட்டேஜ் புக் பண்ணி சாந்தி முகூர்த்த ஏற்பாடுகள் பண்ண வைக்கறாங்க. இதை மோப்பம் பிடிச்சுட்டு அணு, சாக்க்ஷிகிட்ட சொல்லிடறா. அப்புறம் என்ன சாக்ஷி ரோஜா,அர்ஜுன் சாந்தி முகூர்த்தம் நடக்க கூடாது.அவங்க செத்துப்போகட்டும்னு அதற்கான வேலைகளை ரொம்ப தீவிரமா செய்யறா.
செழியன் கண்மணி
நாயகி சீரியலில் கண்மணிக்கும், செழியனுக்கும் கல்யாணமாகி ஒரு வருஷத்துக்கு மேலாகியும் இன்னும் சாந்தி முகூர்த்தம் நடக்கலியாம். அது கருத்து வேறுபாடு எது வேணா இருக்கட்டும். ஆனால்,இதை தெரிஞ்சுக்கிட்ட சுகாசினி அவங்க கருத்து வேறுபாடுகள் மறைஞ்சு சாந்தி முகூர்த்தத்துக்கு ரெடியானாலும், இவள் சதி செய்து கெடுக்கறா. இதுக்கு டாக்டர் வேற துணையா இருக்கார்.
இல்லைன்னு தெரிஞ்சுமா
அவன் தனக்கு இல்லை,அவன் மனசில் தனக்கு இடம் இல்லை,அவனுக்கு வேற கல்யாணம் ஆயிருச்சுன்னு தெரிஞ்சும் அவன் மேல ஆசைப்படறது.சாந்தி முகூர்த்தம் நடக்க விடாம செய்யறது...இதெல்லாம் சும்மா கதைக்காக எதை வேணும்னாலும் சொல்லிடலாம்னு சொல்றாங்க. இந்த ஃபார்முலாவை முதலில் சீரியல் எடுப்பவர்கள் மாத்தியாகணும்.
இதுவும் அப்படித்தான்
கல்யாணம் எப்படி குறிப்பிட்ட தேதியில் நல்ல படியாக நடக்கிறதோ, அப்படி குறித்த இரவில், குறித்த நேரத்தில் சாந்தி முகூர்த்தமும் நடக்கும். இதை ஏன் பெரிசுபடுத்தி, அதை நடக்க விடாமல் சதி செய்வதை ஒரு கதை என்று எங்களுக்கு சொல்கிறீர்கள்?