பிக் பாஸ் வீட்டில் நடந்த உலக அதிசயத்தை பார்த்தீங்களா?
சென்னை:\ பிக் பாஸ் வீட்டில் ஒரு உலக அதிசயம் நடந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டில் எந்த பெண் அழுதாலும் உடனே நம்ம கவிஞர் சினேகன் ஓடி வந்து கட்டிப்பிடித்து தடவித் தடவி ஆறுதல் கூறுவார். அந்த பெண் அவர் பிடியில் இருந்து விலக முயன்றாலும் இறுக்கி அணைத்து ஆறுதல் படுத்துவார்.
அதுவும் அவர் ஆஜானுபாகுவாக இருக்கும் நமீதாவை கட்டிப்பிடித்து தடவியதை யாராலும் மறக்க முடியாது.

அதிசயம்
பிக் பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர் ஒருவர் நேற்று ரொம்ப நேரம் அழுதும் அவரை சினேகன் கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லவில்லை. அந்த பெண் போட்டியாளர் வேறு யாரும் அல்ல காயத்ரி தான்.

சக்தி
நண்பேன்டா சக்தியை பிக் பாஸ் வெளியே அனுப்பியபோது காயத்ரி அழுதார். அவர் கண்ணில் இருந்து வந்த கண்ணீரை துடைத்து கட்டிப்பிடிக்கவே இல்லை சினேகன்.
மீம்ஸ்
காயத்ரி அழுதும் அவரை சினேகன் கட்டிப்பிடிக்காததை வைத்து மீம்ஸ் போட்டுள்ளனர் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்.

கணேஷ்
சக்தி கிளம்பியதை நினைத்து அழுத காயத்ரியின் தோள் மீது கை போட்டு கணேஷ் வெங்கட்ராம் தான் ஆறுதல் கூறினார். சினேகன் காயத்ரியை கண்டுக்கவே இல்லை.


Click it and Unblock the Notifications











