Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கொண்டாடும் மோகன் வைத்யா.. பிக்பாஸ் வீட்டில் பெண் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு எப்போதும் ஒரே இச்சுதான்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மோகன் வைத்யா பெண் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு இச்சு கொடுப்பதில் ரொம்பவும் ஆர்வமாய் உள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இசைக்கலைஞர் மோகன் வைத்யா பங்கேற்றுள்ளார். வீட்டிற்குள் வந்த முதல் மூன்று நாட்கள் அடக்கி வாசித்தார்.
தனது சொந்தக் கதை சோகக்கதையெல்லாம் கூறி ஹவுஸ்மேட்ஸ்களின் மனதில் பரிதாப இடத்தை பிடித்து விட்டார். இதனால் அவரை டாடி டாடி என அழைக்கின்றனர் ஹவுஸ் மேட்ஸ்கள்.
Kaappaan காணாமல் போன பைரவா விக் கிடைச்சிடுச்சு டோய்
உண்மை முகம்
மக்களிடமும் ஓரளவுக்கு சென்டிமென்ட் மரியாதையை பெற்றிருந்தார் மோகன் வைத்யா. ஆனால் நாளுக்கு நாள் வெளி வரும் அவரது உண்மை முகத்தால் மக்கள் நொந்தே விட்டனர்.
ரகசிய பேச்சு
நேற்று சாக்ஷியுடன் டிரெஸிங் ரூமில் மற்ற ஹவுஸ்மேட்கள் குறித்து ரகசியமாக பேசிக்கொண்டிருந்தார் மோகன் வைத்யா. அப்போது லாஸ்லியா அங்குவந்தார். இதனை சாக்ஷி, மோகன் வைத்யாவிடம் கூற லாஸ்லியா நைஸ் கெர்ள் என்று கூறிக்கொண்டே வெளியே வந்தார்.
அண்டபுளுகு
பின்னர் லாஸ்லியாவை பார்த்துவிட்டு ஓ.. நீ இங்கேதான் இருக்கிறாயா? நான் பார்க்கவேயில்லை என அண்ட புளு புளுகினார் மோகன் வைத்யா. இதன்மூலம் அவரது உண்மையான முகம் மீண்டும் மக்களுக்கு தெரியவந்தது.
கட்டிப்பிடித்து முத்தம்
அடுத்தப்படியாக அவர் பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்களுக்கு முத்தம் கொடுப்பதை மிகவும் விரும்புகிறார். ஏதாவது ஒன்றுமே இல்லாத ஒரு விஷயத்தை கூறி அழுவதும், அதற்கு ஆறுதல் சொல்லும் பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதுமாய் கொண்டாடுகிறார் மனுஷன்.
கேட்டு கேட்டு வாங்கி
அதோடு மட்டுமல்ல தான் முத்தம் கொடுக்கும் பெண்களிடம் தனக்கும் முத்தம் கொடுங்கள் என கேட்டு கேட்டு வாங்கி வாழ்க்கையை அனுபவிக்கிறார். அவரின் இந்த நடவடிக்கையை பார்த்த ரசிகர்கள், இதற்கு சினேகன் எவ்வளவோ பரவாயில்லை என்று கூறத் தொடங்கிவிட்டனர்.
கொடுப்பதும் வாங்குவதும்
மீரா டிரெஸின் ஹுக்கை போட சொல்லி கேட்டதை, தான் ஒழுங்கு போல அப்போது கேப்டனாக இருந்த வனிதாவிடம் போய் சொல்லி தேவையில்லாத சண்டையை உருவாக்கினார். ஆனால் இப்போது பெண்களுக்கு முத்தம் கொடுப்பதும் வாங்குவதுமாக கலக்கி வருகிறார் மோகன் வைத்யா.
ஜூலியை மிஞ்சிவிட்டார்
மோகன் வைத்யாவின் இந்த பிஹேவிங் ரசிகர்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அவரை காரித்துப்பாத குறையாக கழுவி ஊற்றி வருகின்றனர். வயதிற்கும் தனது அனுபவத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் நடந்து கொள்ளும் மோகன் வைத்யா புரணி பேசுவதில் ஜூலியை மிஞ்சிவிட்டார்.