Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
சரவணன் வெளியேற்றம்: ஆமாங்க.. எதிர்பாராத டிவிஸ்ட்.. சொல்றது யாருன்னு பாருங்க!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து சரவணன் வெளியேற்றப்பட்டது எதிர்பாராத டிவிஸ்ட் என முன்னாள் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெண்களை பேருந்தில் உரசியதாக கூறிய விவகாரத்தில் சரவணன் மன்னிப்பு கேட்டப் பிறகும் கூட திருப்திபடாத பிக்பாஸ் குழு, அவரை நேற்று அதிரடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றினர்.
இதனை சற்றும் எதிர்பாராத பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். கன்ஃபெஷன் ரூமில் இருந்தபடியே வெளியேற்றப்பட்டார் சரவணன். இதனால் ஹவுஸ்மேட்ஸ்களும் அதிர்ச்சியடைந்தனர்.
சோஷியல் மீடியாக்களில்
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதில் இருந்தே அந்த நிகழ்ச்சிதான் டாப்பில் உள்ளது. அந்த நிகழ்ச்சி குறித்துதான் சமூக வலைதளங்களிலும் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சரவணன் வெளியேற்றப்பட்டது குறித்தும் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
முன்னாள் பிரபலம்
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்றவரும் தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாண்டியின் முன்னாள் மனைவியுமான காஜல், சரவணன் வெளியேற்றம் குறித்து டிவிட்டியுள்ளார்.
|
எதிர்பாராத டிவிஸ்ட்
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஆமாம்.. எதிர்பாராத டிவிஸ்ட். கடந்த வாரம் முழுவதும் செலிபிரிட்டிகளும் பொதுமக்களும் இவருக்கு ரெட்கார்டு கொடுத்து அனுப்ப வேண்டும் என கூறியிருந்தனர். அதற்காக கூட இருக்கலாம் என்று பதிவிட்டுள்ளார் காஜல்.
அந்த விஷயத்திற்காக கூட
சேரனை தரக்குறைவாக பேசிய விவகாரத்தில் சரவணனுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. சேரனை அடிப்பது போல் சரவணன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சென்றார். இந்த விஷயம் பூதாகரமானது. அதனால் சேரன் விஷயத்தை மனதில் வைத்து கூட அவரை வெளியேற்றியிருக்கலாம் என்கிறார் காஜல்.
இவன் கோர்த்து விடுறான்
இதேபோல் மற்றொரு வீடியோவையும் காஜல் ஷேர் செய்துள்ளார். அதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இவன் கோர்த்துவிடுறான் என கமலை ஒருமையில் பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கோர்த்து உடுறாங்க என்றுதான் அந்த வீடியோவில் கூறுவதாக உள்ளது.