Don't Miss!
- News ஆட்களை செட் பண்ணி பணம் சப்ளை..ப்ளான் போட்டதே அவங்க தான்.! அண்ணாமலையா? படக்கென பேசிய வானதி சீனிவாசன்!
- Finance அமெரிக்க நிறுவனத்துடன் டீல்.. எகிறியது ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் பங்கு விலை..!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜாக்பாட் நிகழ்ச்சியின் 500 வது எபிசோட்!
துபாய் நேயர்களின் மத்தியில் சிம்ரனின் கொஞ்சும் தமிழ் கேள்விகளும் பங்கேற்பாளர்களின் பதிலும் ஆரவாரமாய் அமைந்திருந்தது. 500 வது எபிசோடு என்பதால் சிம்ரன் அதிக சிரத்தை எடுத்து உடை அலங்காரம், நகை அலங்காரம் செய்திருந்தார்.
ஜாக்பாட் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தொகுப்பாளராக வந்த குஷ்பூவும் தன் ஜாக்கெட்டினால் ஜாக்பாட் நிகழ்ச்சிக்கு ஒரு நல்ல மார்க்கெட்டினை தக்க வைத்தார். அதன்பின் நதியா சில வாரங்கள் இதனை தொகுத்து வழங்கினார். தற்போது இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகை சிம்ரனின் கொஞ்சு தமிழும், போட்டியாளர்களிடம் அவர் கேட்கும் இயல்பான கேள்விகளும் நேயர்களிடையே வரவேற்பினை பெற்றுள்ளது என்றே கூறலாம்.
ஜாக்பாட் நிகழ்ச்சியின் சிறப்பு ஜெயிப்பவர்களுக்கு மட்டுமே பரிசு என்பதில்லை. பார்வையாளர்களுக்கும், நேயர்களுக்கும் கூட பரிசுகள் உண்டு.இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு கேள்விகளும், வீடு மற்றும் வெளி உலகத்தில் நடக்கும் அனைத்து சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை.
நிகழ்ச்சியை தயாரிக்கும் 'டெலிசூம்' நிறுவனத்திற்கு வரும் விண்ணப்பங்களின் அடிப்படையில் அணிகள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள். நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் அணியினர், இயக்குநர் மற்றும் தேர்வுக்குழுவினாரால் தேர்ந்தெடுக்கப்படுவதாக கூறுகிறார் தயாரிப்பாளர் ஹேமா சுனில்.