Don't Miss!
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- News பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை! சென்னை ஹைகோர்ட் அதிரடி! சரணடைகிறாரா ராஜேஷ் தாஸ்?
- Finance Adani: விதிமுறைகளை மீறி முதலீடு! வெளிநாட்டு நிறுவனங்கள் செய்த டகால்டி வேலையை கண்டுபிடித்த செபி!
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Automobiles தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஓவியா மாதிரியே செய்த ஜனனி: தான் முட்டாள் என்பதை ஒப்புக் கொண்ட ஐஸ்
Recommended Video
சென்னை: ஓவியா மாதிரியே நடந்து கொண்டிருக்கிறார் பிக் பாஸ் 2 போட்டியாளர் ஜனனி.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக ஓவியாவுக்கு கிடைத்த புகழை பார்த்து நடிகைகள் எல்லாம் அசந்துவிட்டார்கள். பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் அடுத்த ஓவியா யார் என்பதை தெரிந்து கொள்ளவே பலரும் நிகழ்ச்சியை பார்க்கத் துவங்கினார். ஆனால் ஒரே ஓவியா தான், அடுத்த ஓவியா எல்லாம் கிடையாது என்பது தெரிந்தது.
யாஷிகா அவ்வப்போது ஓவியா மாதிரி ஏதாவது செய்ய முயற்சித்தும் பலனில்லை.
|
ஜனனி
வீட்டின் தலைவரான யாஷிகா ஜனனிக்கு முதலை விருதை அளித்தார். அதாவது நீலிக் கண்ணீர்விட்டு காரியம் சாதிப்பவராம் ஜனனி. இது எனக்கு பொருந்தாது என்று கூறி விருதை வாங்க மறுத்துவிட்டார் ஜனனி. ஜனனி செய்தது சரி தான். அவர் எப்பொழுது நீலிக் கண்ணீர் வடித்துப் பார்த்தாராம் யாஷிகா.
ஜனனி
மகத்தும், ஜனனியும் நட்பாக இருப்பது யாஷிகாவுக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் சம்பந்தமே இல்லாமல் அவருக்கு முதலை விருதை அளித்துள்ளார். ஜனனி விருதை ஏற்காமல் நடையை கட்டியது ஓவியாவை நினைவூட்டுகிறது. கடந்த சீசனில் சினேகன் ஓவியாவுக்கு சோம்பேறி விருதை கொடுத்தபோது அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைதி
ஜனனியை வெஷ பாட்டில் என்று கூறியதற்கு ஏற்றபடி அவர் நடக்கவில்லை. தற்போது எல்லாம் யார் அன்பு காட்டுகிறாரோ அவர் பின்னாலேயே சென்று விடுகிறார். பத்தோடு ஒன்னு பதினொன்றாக இருக்கும் ஜனனியை பார்த்தால் வெஷ பாட்டில் ஃபீல் வருவது இல்லை.
|
ஐஸ்வர்யா
மும்தாஜ் ஐஸ்வர்யாவுக்கு கழுதை விருதை அளித்தார். அதற்கு ஐஸ்வர்யாவோ ஒரு முட்டாள் இன்னொரு முட்டாளுக்கு விருது கொடுக்கிறது என்று திமிராக கூறினார். ஆக, அவர் முட்டாள் என்பதை அவரே ஒப்புக் கொண்டார். அது போதும் ஐஸ்வர்யா.