Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
Aranmanai kili serial: ஜானு மூலிகையோட வந்துட்டா துர்கா பொறாமையில்!
சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் ஒரு மலை தாண்டி அடுத்த ஆலங்கட்டி மலைக்கு போன ஜானு, சரியான மூலிகையுடன் திரும்பி ஆஷ்ரமத்துக்கு வர்றா.
மாற்று வழி சொல்லி, புதைக் குழியில் மாட்டிவிடப் பார்த்து, அதே மாதிரி ஜானுவும் புதை குழியில் விழுந்துடறா. எல்லாம் துர்கா செய்த ஏற்பாடு. துர்கா ஜானுவின் புருஷன் அர்ஜுனின் பெரியம்மா பொண்ணு.
முதலில் மூலிகையில் பூ நாகத்தை விட்டு, ஜானுவை கொத்த வச்சாயிற்று. அதிலும் ஜானு பிழைச்சுகிட்டு, இதோ இப்போ மூலிகையுடன் வந்துட்டா. இனியும் அந்த மூலிகையை பயன்படுத்த விடாம சதி செய்ய பார்க்கறா துர்கா.
அம்மா துர்கா
துர்காவின் அம்மாவுக்கு எதோ ஒரு காரணத்தால் மன நிலை சரியில்லாமல் போயிருந்து. அவங்களை அன்பா கவனிச்சு, மனுஷியா மாத்தினவ ஜானு. பிறகும் அவள்மேல் துர்கா எப்போதும் கோவமாக இருப்பதும்,வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்று நினைப்பதும் ஏன் என்றுதான் புரியவில்லை. உயிருக்கு உயிரா நினைக்கும் அம்மாவை காப்பாத்தி குடுத்த ஒரு பொண்ணு மேல அந்த தாய் பெத்த பெண்ணுக்கே கொலை வெறி வருமா?
இப்படி எல்லாமா?
கதையை நகர்த்த இப்படி எல்லாமா கட்சிகளை வைப்பீங்க? எந்த வைத்தியருங்க...மலை தாண்டி மலைக்கு போயி, அதுவும் தனி ஒரு பொண்ணா போயி மூலிகை எடுத்துட்டு வான்னு இரக்கமே இல்லாம சொல்லுவார்? அப்படி எடுத்துட்டு வந்த மூலிகையை துர்கா மறுபடியும் வீணாக்க துடிக்கிறாள்.. அர்ஜுன் வைத்தியத்தை கெடுக்கணும்னு மறுபடியும் மூலிகையை சுவாமிஜி எங்கே வச்சிருப்பார்னு தேடறா.
இவ்ளோ மர்மம்
பணக்காரங்கள் வீட்டில் இருப்பவர்களும் மனிதர்கள்தானே... அப்படி இருக்கையில் மனிதபிமானமே இல்லாமலா அவர்கள் வீட்டில் மனிதர்கள் இருப்பார்கள். ஒரு ஏழை பெத்த பொண்ணு துர்கா.அவளை வீட்டை விட்டு துரத்த இவ்வளவு சதி வேலைகள் பார்க்கணுமா?
ஜானு அர்ஜுனுக்கு
நல்ல பொன்ண்ணு ஜானு, அவள் வேற ஒரு நல்லவனை கல்யாணம் செய்துக்கிட்டு, நல்லா வாழணும்னு நினைச்சுத்தான் அம்மா,அக்கா என்ன சொன்னாலும் கேட்டுகிட்டு,விவாகரத்துக்கு அர்ஜுன் சம்மதிக்கறான். இதுல மட்டும்தான் லாஜிக் இருக்கு. மற்ற முழுக் கதையும் சுத்த வேஸ்ட். எதுக்கு இப்படி கதையை இழுக்க துர்க்கான்ற ஒரு பெண்ணுக்குள் இத்தனை வன்மத்தை திணிக்கறீங்க?
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
-
ஒரே தேதியில் இரண்டு இழப்புகள்.. சந்தானத்துக்கு உச்சக்கட்ட வேதனை.. ரசிகர்கள் ஆறுதல்