ஜீ தமிழ் சீரியல்கள் ஜனவரி 6ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!

சென்னை: கெட்டிமேளம் அஞ்சலி சிவராமன் முகமூடியை அணிந்து மகேஷ் முன்பு நிற்க அவன் சிவராமன் ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை உளர இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.அதாவது, அஞ்சலி உண்மை அறிந்து ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வருகிறாள், கொஞ்சம் கொஞ்சமாக மகேஷ்க்கு போதை தெளிய அவன் லாஸ்ட்டாக அஞ்சலி தான் ஜூஸ் கொடுத்தா என்று அறிந்து சிசிடிவி காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். இதையடுத்து மகேஷும் ஹாஸ்பிடல் கிளம்பி வருகிறான். இங்கே அஞ்சலி எல்லா வார்டிலும் சென்று சிவராமனை தேட ஒரு கட்டத்தில் மகேஷ் வந்து விடுகிறான், அஞ்சலி இங்க என்ன பண்றீங்க என்று விசாரிக்க நான் ரெகுலரா இங்க தான் செக்கப் வருவேன் என்று சொல்கிறான்.

பிறகு ஆப்ரேஷன் செய்த டாக்டர் அங்கு வர மகேஷ் கண்ணை காட்ட அவனும் ஆமாம் என்று சொல்லி மகேஷை காப்பாற்றுகிறான், மறுபக்கம் துளசி அத்தை மாமாவுக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணாமல் என்று ஐடியா கொடுக்க வெற்றி சூப்பர் ஐடியா ஆனால் இதை இப்படியே சொன்னா ஓகே சொல்ல மாட்டாங்க என்று திட்டம் ஒன்றை தீட்டுகிறான். பிறகு தியா ஒரு போஸ்டர் பார்த்தேன். அதுல ஒரு தாத்தா பாட்டிக்கு கல்யாணம் ஆகுற மாதிரி போட்டோ போட்டு இருந்தாங்க, வயசானவங்களுக்கு எப்படி கல்யாணம் பண்ணுவாங்க என்று கேட்க வெற்றி அது 60-ம் கல்யாணம் என்று சொல்லி அப்படியே வீட்டிலும் பேசி அப்பாவின் அறுபதாம் கல்யாணத்திற்கு சம்மதம் வாங்குகிறான். ஈஸ்வரமூர்த்தி கல்யாணதிற்கான வேலைகளை தொடங்க சொல்கிறார்.

அண்ணா: பாண்டியம்மா கொலை வழக்கில் சண்முகத்தை அழைத்து செல்லும் போலீஸ் அவனை விசாரணை செய்கின்றனர், சண்முகம் இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று வாக்கு கொடுக்கிறான். இங்கே ஊர் காரர்கள் பூமி பூஜை போடும் போதே தடங்கல் ஏற்பட அபசகுணமாக கருதுகின்றனர். இதனால் சண்முகம் வந்ததும் இந்த ஹாஸ்பிடல் கட்ட வேண்டாம் என்று ஷாக் கொடுக்கின்றனர். பரணி வீட்டிற்கு சென்று இதற்கெல்லாம் காரணமான சௌந்தரபாண்டியிடம் சத்தம் போட சௌந்தரபாண்டி இந்த ஹாஸ்பிடலை கட்ட விட மாட்டேன் என்று சொல்ல பரணி கண்டிப்பாக காட்டுவோம் என சவால் விடுகிறாள். இவர்கள் இருவரும் பேசுவதை கேட்ட வேதவள்ளி இது வெறும் ஆரம்பம் தான், இனிமே தான் முழு ஆட்டத்தை பார்க்க போறீங்க என்று சொல்கிறாள். மறுபக்கம் ரத்னாவும் அறிவழகனும் சாப்பிடாமல் இருக்கும் வைகுண்டத்தை சமாதானப்படுத்தி சாப்பிட வைக்கின்றனர்.

Janunary 6th episode update of Getti Melam Anna Veera Parijatham Serial on Zee Tamil TV 6
Photo Credit:

பாரிஜாதம்: இசையை வீட்டுக்கு தெரியாமல் ரூமுக்கு அழைத்து வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பதை பார்க்கலாம். அடுத்த நாள் காலையில் சுபத்ரா ஸ்ரீஜா மற்றும் இசை என இருவருக்கும் தாலி பிரித்து போடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறாள். ராகவன் வர்ஷினி சந்திச்சு நீ இதுக்கு எல்லாம் கவலைப்படாத இருவரும் ஃபங்ஷன் தான் என்னைக்கு இருந்தாலும் நீ தான் என்னுடைய மனைவி என்று சொல்கிறான். மேலும் ஸ்ரீஜாவிடமும் வர்ஷினி தான் என் பொண்டாட்டி உன்ன என்னைக்கும் அந்த இடத்துல வச்சு பார்க்க முடியாது என பதிலடி கொடுக்கிறான். இன்னொரு பக்கம் விஷால் நீ என்ன வேணா பண்ணிக்கோ என்னால இந்த பங்ஷன்ல இருக்க முடியாது என்று சொல்லி குடிக்க கிளம்பி செல்கிறான். பங்ஷனின் போது விஷால் கோவிலுக்கு சென்று இருப்பதாக சொல்லி இசை சமாளிக்க சுபத்ரா அவன் இப்போ இங்க வந்தாகணும் என்று கட்டளை இடுகிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X