ஜீ டிவியில் ஜோதா அக்பர்...!!

திப்பு சுல்தான், ஜான்சிராணி, போன்ற வரலாற்று கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல்கள் மக்களை கவர்ந்துள்ளன, வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் இப்போது புதிய சீரியலான ஜோதா அக்பரும் இடம் பெற வாய்ப்புள்ளது.
அக்பரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான் ஜோதா அக்பர். இப்போது அதே ஜோதா அக்பர் என்ற பெயரில் மெகா சீரியல் ஒன்றும் உருவாகியுள்ளது.
பிரபல இந்தி தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தான் இந்த தொடரை தயாரிக்கிறார். சினிமாவை காட்டிலும், டி.வி. சீரியல் இன்னும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளதாம்.
தற்போது இந்தியில், ஜீ டி.வி.யில் ஒளிப்பரப்பாகி வரும் இத்தொடரை விரைவில் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப்பிங் செய்து ஒளிப்பரப்ப இருக்கிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications