Don't Miss!
- News உயிருக்கு போராடிய குட்டி யானை.. யாரையும் நெருங்கவிடாமல் காப்பாற்ற தாய் யானை நடத்திய பாசப்போராட்டம்
- Lifestyle கொய்யாப்பழத்தை உங்கள் குழந்தைகளுக்கு ஊட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
- Automobiles ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!
- Sports நீ என்னப்பா 15 பந்துல அரைசதம் அடிக்கிற.. வரலாறு படைத்த மெக்குர்க்.. ட்ராவிஸ் ஹெட்டுக்கு பதிலடி!
- Technology iPhone-க்கு வந்த இடி.. Google-இன் அடுத்த ஆப்பு.. SONY கேமரா.. OLED டிஸ்பிளே.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
அணைத்து நின்ற ஜூலி.. பில்லரா நான் இருக்கக் கூடாது.. ஏங்கிப் புலம்பும் ரசிகர்கள்
சென்னை: திடீரென கண்ணடித்து வா வா என அழைத்து வீடியோ வெளியிட்ட ஜூலி .இது என்ன புது கதையா இருக்கு இப்படி இறங்கி விட்டார் என புலம்பும் ரசிகர்கள்.
பல பேர் தங்களுடைய திறமையினால் முன்னேறி வந்து கொண்டிருக்கும் நிலையில் தன்னுடைய திறமை ஒரு பக்கம் இருந்தாலும் பலபேர் கலாய்த்து மீம்ஸ் போட்டு பிரபலமான ஜூலி தற்போது மீண்டும் வைரலாக பரவி வருகிறார்.
அதுவும் அவர் இன்ஸ்டாகிராமில் இப்படி ஒரு போஸ்ட் போடுவார் என்று அவருடைய ரசிகர்கள் கூட எதிர்பார்க்கவில்லை.
சொட்டச் சொட்ட நனைந்து.. திகட்ட திகட்ட குளுமை காட்டிய சாக்ஷி!
கண்ணிலேயே ஆயிரம் கதை
கண்ணாலே கதை சொல்லும் அளவிற்கு திறமை இருக்கும் இவர் தற்போது மேக்கப் போட்டுக்கொண்டு வித்தியாசமாக வீடியோ போடுகிறேன் என இவர் வெளியிட்ட வீடியோ ரொம்பவே வித்தியாசமாக பரவிவருகிறது .சும்மாவே இவரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் இவர் இந்த மாதிரி வீடியோ போட்டதை பொறுத்துக் கொள்ளமுடியாமல் இவர் வீடியோ வெளியிட்ட சிறிது நேரத்திற்குள் கமெண்ட்டு மழை பொழிந்து வருகிறார்கள்.
பிக் பாஸ் பிரபலம்
முதல் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வெளியுலகத்திற்கு தெரிய ஆரம்பித்த ஜூலி தற்போது சமூக வலைத்தளங்களை கலக்கு கலக்கு என கலக்கிக் கொண்டிருக்கிறார் .இவர் இந்த மாதிரி மாறுவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை .அந்த அளவிற்கு பட்டிதொட்டி எல்லாம் தற்போது கலக்கி கொண்டிருக்கிறார் .இவர் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போது தன்னுடைய கேரக்டரை இவரே இழிவுபடுத்தும் விதமாக ஓவியாவுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக பல பேர் இவரை வெறுத்து வந்தனர்.
கலக்கித் தள்றாரே
ஆனால் தற்போது மீண்டும் இவர் இந்த மாதிரி ஒரு செயலை செய்வார் என எதிர்பார்க்கவில்லை என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் அனைவரும் விரும்பிப் பார்ப்பது சீசன் ஒன்று மட்டும்தான் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் அடிமையாகிவிட்டனர் .அந்த அளவிற்கு முதல் சீசனில் அனைவரின் கவனமும் இருந்தது. அதற்கு பிறகு அந்த சீசனில் கலந்து கொண்டவர்கள் நன்றாகவே முதல் சீசனை பார்த்து பழகிவிட்டதால் இவர்கள் அந்த வீட்டிற்குள் நடிக்க தான் செய்தார்கள் என ரசிகர்கள் கூறி வந்து கொண்டிருந்தனர்
கலாய் வாங்காத நாளே இல்லை
.ஆனால் முதல் சீசனில் அவர்களது உண்மையான முகமும் வெளியே தெரிந்து கொண்டிருந்தது .அந்த மாதிரிதான் அதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு வீர தமிழச்சி யாக இருந்த ஜூலி இந்த நிகழ்ச்சியின் மூலமாக பலபேர் கலாய்க்கும் அளவிற்கு மாறி விட்டார். அதுவும் இவருக்கு அதிகப்படியான நெகட்டிவ் கமெண்டுகள் தொடர்ந்து இப்ப வரைக்கும் வந்து கொண்டிருக்கிறது.
நல்ல முன்னேற்றம்
நிகழ்ச்சி முடிந்த பிறகு இவரும் ஓவியாவும் பிரண்ட்ஸ் களாக மாறிவிட்டனர் என கூறி வந்தாலும் ரசிகர்கள் இன்னும் அந்த நிகழ்ச்சியை வைத்தே இவரை மதிப்பிடுகின்றனர். ஆனால் தன்னை நோக்கி வரும் நெகட்டிவ் கமெண்டுகளை எல்லாம் இவர் ஒரு சிறு துரும்பாக கூட மதிக்காமல் தட்டி வீசிவிட்டு என்னுடைய பாதையில் நான் போய்க்கொண்டே இருக்கிறேன் என சிறப்பாக முன்னேறி வந்து கொண்டிருக்கிறார் .இதற்கு முன்பாக இவர் பார்த்து வந்த செவிலியர் பணியை கூட இவர் விட்டுவிட்டு முழு நேரமாக மாடலிங்கில் மூழ்கிவிட்டார் .
மாடலிங்கில் தீவிரம்
கேமரா முன்பு நடிப்பது நன்றாகவே பிடிக்குமாம் .அதனால்தான் இனி வாழ்க்கையே முழுசாக இப்படியே கொண்டு விடலாம் என இவரும் முடிவெடுத்துவிட்டார். ஆனால் தற்போது இவரது காட்டில் நல்ல மழைதான். தொடர்ந்து இவருக்கு நெகட்டிவ் கமெண்டுகள் வந்து கொண்டிருக்கும் போதும் விளம்பர மாடலிங் வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. நெகட்டிவ் கமெண்ட் களுக்கு செவிசாய்க்காத இவர் தன்னுடைய வேலையில் கவனத்தை செலுத்தி வருகிறார்.
— மரியஜூலியனா (Maria Juliana) (lianajohn28) March 12, 2021 |
கலக்கும் வீடியோ, போட்டோஸ்
மாடலிங்கில் எடுக்கும் புகைப்படங்களையும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு நானும் இங்கே தான் இருக்கிறேன் என ரசிகர்களுக்கு எனர்ஜியை கூட்டி வருகிறார் .சில நேரங்களில் இவர் சமூக அவலங்களையும் தன்னுடைய போட்டோஷூட்டில் கொண்டு வந்து கொண்டிருந்தார் .ஆனால் தற்போது இப்படி ஒரு போட்டோஷூட் நடத்துவார் என யாரும் நினைக்கவில்லை. நடிப்பவர்களுக்கு டான்ஸும் கவர்ச்சியும் ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது.
உருகி வழியும் ரசிகர்கள்
அதை நன்றாக காட்டினால் தானே தங்களுடைய ரசிகர்கள் எங்களை நன்றாக ரசிப்பார்கள் எனசிலர் ரொம்பவே தாராளமாக இறங்கி வந்து கொண்டிருக்கின்றனர். காதல் ஒரு நாள் என் வாசல் வந்ததே உள்ளே அழைத்தேன் அது என்ன கொல்லுதே என கொல்லும் பார்வையால் கவர்ச்சியாக லுக்கு விட்டு ரசிகர்களை பாடாய் படுத்தும் வகையில் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இவரை இப்படி பார்த்ததும் பதறிப் போன ரசிகர்கள் இவர் போஸ்ட் போட்டு சிறிது நேரத்தில் லைக்களையும் கமெண்ட்டுகளையும் கொட்டி வருகின்றனர்.