Don't Miss!
- Finance பேடிஎம் UPI ஐடிகள், புதிய வங்கிகளுக்கு மாற்றம்.. RBI அதிரடி அறிவிப்பு!
- News ‛‛சார் ஹிந்தி ப்ளீஸ்’’.. முகம்மாறி சீமான் கூறிய வார்த்தை.. விடாத பெண் நிருபரால் கடைசியில் ட்விஸ்ட்!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கே. பாலசந்தரின் அமுதா ஒரு ஆச்சரியக்குறி!
சினிமாவில் ஜாம்பவான் இயக்குநராக இருந்த கே. பாலசந்தர் சின்னத்திரையின் வரவிற்குப் பிறகு பொதிகையில் தொடங்கி சன், கலைஞர், ஜீ தமிழ், ஜெயா டிவி என பிரபல தொலைக்காட்சிகளில் சிறப்பு வாய்ந்த நெடுந்தொடர்களை இயக்கியுள்ளார். தற்பொழுது ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் சாந்தி நிலையம் தொடர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இதனையடுத்து புதிய தொடருக்கான வேலையில் பிஸியாகிவிட்டார் பாலசந்தர். நெடுந்தொடருக்கான தலைப்பு “அமுதா ஒரு ஆச்சரியக்குறி"
இந்த தொடரில் கே.பாலசந்தரின் ஆஸ்தான நட்சத்திரங்களான "கவிதாலயா' கிருஷ்ணனும் ரேணுகாவும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தத் தொடரின் கதையைப் பற்றி அண்மையில் கலைஞரை சந்தித்து பாலசந்தர் கூறியுள்ளார்.
கதையைக் கேட்டறிந்த கலைஞர் மகிழ்ச்சியடைந்து பாலசந்தரை பாராட்டியதோடு தொடரின் தலைப்பைப் பற்றிக் கேட்டுள்ளார். "கமலா ஒரு கேள்விக்குறி' என்று பாலசந்தர் கூறிய உடன் அதனை "அமுதா ஒரு ஆச்சர்யக்குறி' என்று மாற்றியிருக்கிறார் கலைஞர். பாலசந்தருக்கும் அந்தத் தலைப்பு மிகவும் பிடித்துவிட அதனையே விளம்பரப்படுத்திவிட்டார்.