Don't Miss!
- Technology யாரும் நம்பமாற்றங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- News தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி! மனைவி நேகா மீது போலீஸில் புகார்!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
என்னடா இது.. 7.30 மணி சீரியலால் சன் டிவிக்கு வந்த ஏழரை!
சென்னை: சன் டிவியில் 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கல்யாண வீடு சீரியல் BCCC எனப்படும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளடக்க புகார்கள் மையத்தின் கண்டனத்தையும் அபராதத்தையும் பெற்றுள்ளது.
பல மோசமான மற்றும் ஆபாசமான உரையாடல்களை உள்ளடக்கிய கற்பழிப்பு காட்சியை சித்தரித்ததற்காக பார்வையாளர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து பி.சி.சி.சி கவுன்சில் ரூ .2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
மே மாதத்தில் ஒளிபரப்பப்பட்ட மூன்று அத்தியாயங்களில் கற்பழிப்பு காட்சிகள் இருந்தன, அந்த நிகழ்ச்சியின் வில்லி ரோஜா தனது அக்காவை கற்பழிக்க ஒரு சில அடியாட்களை ஏற்பாடு செய்கிறார். அவர்களிடம் கட்டளை பிறப்பித்து மற்ற ஆட்களையும் பின்பற்றும்படி வலியுறுத்துகிறார்.
கண்டனத்திற்குரிய வசனம் பின்வருமாறு, "கவனமாக கேளுங்கள் நீங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப் போகும் பெண் திருமணமாகாதவர், கன்னிப்பெண். நீங்கள் அவளை பாலியல் பலாத்காரம் செய்யும்போது, உங்கள் இதயத்தில் இரக்கமோ பரிதாபமோ இருக்கக்கூடாது. எங்களுக்கு பணம் கொடுத்த ரோஜா மேடத்தின் சகோதரிக்கு நாங்கள் இதைச் செய்கிறோம் என்று நீங்கள் நினைக்கக்கூடாது. பரிதாபம் இருக்கக்கூடாது. அவள் எவ்வளவு கூக்குரலிட்டாலும், பரிதாபமோ, தயவோ, கருணையோ இருக்கக்கூடாது. உனக்கு புரிகிறதா?" என கேட்கிறார்.
அதற்கு பதிலளிக்கும் அந்த நபர், "நீங்கள் சொன்ன அனைத்தையும் நான் கேட்டேன் என்று கூறிவிட்டு மனதில் ,அது உங்கள் சகோதரிக்கு என்று நீங்கள் நினைத்தீர்களா? நீங்கள் விவரித்ததெல்லாம் உங்களுக்கு நடக்கும்" என்று மனதிற்குள் நினைக்கிறார்.
பார்வையாளர்களின் பல புகார்களை அடிப்படையாகக் கொண்டு பி.சி.சி.சி ஒரு கண்டன அறிவிப்பை அனுப்பிய பின்னர், சேனல் தரப்பிலிருந்து, இந்த நிகழ்ச்சி "கற்பனையான குடும்பம் சார்ந்த சீரியல், இது தார்மீக மதிப்புகள் மற்றும் குடும்பம் மற்றும் பெண்களின் நல்ல நெறிமுறைகளை வலியுறுத்துகிறது" என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.
ஏற்கனவே பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வரும் வேளையி்ல், குடும்ப நெறிகளை வலியுறுத்துகிறோம் என்ற பெயரில், பழி வாங்குதல், வன்மம் நிறைந்த காட்சிகள், முறையற்ற வசனங்களை வைப்பதை எந்த வகையில் சேர்ப்பது என தெரியவில்லை. இது போன்ற பழிவாங்குதல் எப்போது குடும்ப நெறியில் சேர்ந்தது எனவும் தெரியவில்லை. எதார்த்தமான இயக்குநர் என பெயர் எடுத்த திருமுருகனையும் இந்த டிஆர்பி விட்டு வைக்கவில்லை. டிஆர்பி காக சீரியல் எடுக்காமல் சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை கூறலாமே!