காப்பாற்றப்பட்டது யார்? லாஸ்லியாவுடன் அரட்டை அடிக்கும் கமல்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திப்பது வழக்கம். அப்போது இந்த வாரம் யார் காப்பாற்றப்படுகிறார்கள்? யார் வெளியேற்றப்படுகிறார்கள் என்பது குறித்து பேசுவார்.
அந்த வகையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. அதில் நடிகர் கமல்ஹாசன், லாஸ்லியாவுடன் அரட்டை அடித்து வருகிறார்.

யாரை தக்க வைக்க வேண்டும்
புரமோவில் நடிகர் கமல், யாரை தக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.. லாஸ்லியா என கேட்கிறார். அதற்கு லாஸ்லியா சேரனுக்கும் கவினுக்கும் இடையில் உட்கார்ந்து, அவர்கள் இருவர் மீதும் கையை வைத்தார்.

அரட்டை அடிச்சுட்டு இருக்கேன்
இதனை பார்த்த கமல், என்னை இங்க சொல்ல சொன்னது யாரை காப்பாத்துறீங்கன்னு போய் சொல்லிட்டு வாங்கன்னு, நான்தான் வாய வச்சுட்டு சும்மா இல்லாம இவங்கக்கூட அரட்டை அடிச்சுட்டு இருக்கேன்.

கண்ணடித்த கமல்
யாரை காப்பாத்துறோமோ பட்டுன்னு சொல்லிட்டு ஆக வேண்டிய வேலையை பார்க்கலாம்ல்ல, புரோகிராம் டைம்ன்னு ஒன்னு இருக்குல்ல என்று கூறியபடி கண்ணடிக்கிறார் கமல்.

லாஸ்லியா காப்பாற்றப்பட்டார்?
இதனை பார்த்த ஆடியன்ஸ் ஓவென கத்தி ஆரவாரம் செய்கின்றனர். இந்த புரமோவின்படி பார்த்தால் லாஸ்லியா காப்பாற்றப்பட்டதாக தெரிகிறது.

திட்டும் ரசிகர்கள்
ஏற்கனவே சேரன் வெளியேற்றப்பட்ட தகவலால் கடுப்பில் உள்ள ரசிகர்கள் இந்த புரமோவால் மேலும் கடுப்பாகியுள்ளனர். விஜய் டிவியையும் கமல்ஹாசனையும் திட்டி டிவிட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











