சேரனுக்கு ரகசிய அறை கிடைச்சது.. கவினுக்கு பப்ளிக்கா அறை கிடைச்சது.. அதிர விட்ட கமல்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை நடிகர் கமல்ஹாசன் சந்திப்பது வழக்கம். அந்த வகையில் இன்று சனிக்கிழமை என்பதால் கமல்ஹாசன் வரும் புரோமோவிற்காக காத்திருந்தனர் ரசிகர்கள்.
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ. இதில் ஆடியன்ஸ்களுடன் அமர்ந்த படியே ஓபனிங் கொடுக்கிறார் கமல்.

அன்றாடம் அனுபவிப்பவர்கள்
அவர் பேசியதாவது, பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ள போட்டியாளர்களுக்கு வெளியே உள்ள புகழும் விமர்சனமும் உடனுக்குடன் போய் சேர அதை அன்றாடம் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் அவர்களின் குடும்பத்தார் எனக்கூறி வணக்கம் சொல்கிறார்.

கவினுக்கு பப்ளிக்கா ஒரு அறை
பின்னர் மேடைக்கு சென்ற கமல் நீங்கள் உங்கள் குடும்பத்தாரை பார்த்து மகிழ்ந்துவிட்டீர்கள். சேரனுக்கு ரகசிய அறை கிடைத்தது. கவினுக்கு பப்ளிக்கா ஒரு அறையும் கிடைத்தது. ரெண்டும் ரெண்டு விதமான அறைகள் என்கிறார் கமல்.

முதல் புரமோ
அதனை கேட்ட கவின், நல்லாவே புரிஞ்சது சார் என்று கூறுகிறார். இப்படியாக முடிகிறது முதல் புரமோ. நேற்று கவினை சந்திக்க பிக்பாஸ் வீட்டிற்கு வந்த அவரது நண்பர் பளார் என ஓங்கி அறைந்த நிலையில் கமல் இன்று அந்த விவகாரம் குறித்தும் பேசுவார் என்பது முதல் புரமோவில் தெரியவந்துள்ளது.
பப்ளிக்கு அறை கேவலத்துக்கு
இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் ரகசிய அறை அவரின் நன்னடத்தைக்கு கிடைத்தது. பப்ளிக் அரை கவினின் கேவலமான நடத்தைக்கு கிடைத்தது என டிவிட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











