சென்ட்ராயன் கேட்ட கேள்விக்கு கமல் சொன்ன பதிலைக் கேட்டீங்களா!
சென்னை: போட்டியாளர்களை வெளியே அனுப்புவதுதான் பிடித்த விஷயம் என கமல் கூறினார்.
பிக்பாஸ் கிராண்ட் பினாலேவில், போட்டியாளர் இடத்தில் நான் இருக்கிறேன், தொகுப்பாளராக நீங்கள் கேள்வி கேட்களாம் என உட்கார்ந்தார்.
அப்போது ஜனனி கேள்வி கேட்க எழுந்ததும், டக்கென எழுந்து வணக்கம் சொன்னார். அதேபோல் ஷாரிக்குகும் சொன்னது அரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

செண்ட்ராயன் மைக்கை வாங்கி, பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பை கொட்டினார். ஐஸ்வர்யா இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என கேட்டதற்கு.. சற்றும் தாமதிக்காமல், "நான் பண்ண மாட்டேன் சார் நான் ஸ்வச் பாரத்" என்றார். பிரதமர் மோடி ஸ்வச் பாரத் அபியான் என துவங்கிய காலத்தில் கமல்ஹாசன் களத்தில் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், நீங்கள் அதிகம் ஓட்டு வாங்குகிறீர்கள் என டேனி பேச ஆரம்பித்ததுமே.. இனிமேல் தான் வாங்கனும் என அரசியல் பஞ்ச் அடித்தார்.
பிக்பாஸில் உங்களுக்கு பிடிச்ச மொமெண்ட் எது எனக் கேட்கப்பட்டதற்கு.. உங்களை வெளியே அனுப்பும்போது உங்கள் மனநிலையை மாற்றி அடுத்த நகர்வுக்கு தயார் செய்து அனுப்புவதுதான் பிடித்த மொமெண்ட் எனக் கூறினார்.
இத்தனை நாட்கள் கமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதில் இன்றுதான் மிகச் சிறப்பான டைமிங் சென்சை வெளிப்படுத்தினார்.


Click it and Unblock the Notifications











