Don't Miss!
- News உங்கள் வாக்கை வேறு ஒருவர் செலுத்திவிட்டால் என்ன செய்வது? உங்களால் வாக்களிக்க முடியுமா! எளிய விளக்கம்
- Lifestyle கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அவரே புதுசாதான் வந்திருக்காரு.. உங்களுக்கு தெரியாதா? தர்ஷனை மறைமுகமாக சாடிய கமல்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் கவின் கேங்குடன் சேர்ந்துக்கொண்டு தர்ஷன் தனது ஒரிஜினாலிட்டியை இழந்து வருவதை கமல்ஹாசன் மறைமுகமாக சாடினார்.
பிக்பாஸ் வீட்டில் வந்த நாள் முதல் செல்லப்பிள்ளையாக இருந்தவர் தர்ஷன். என்ன நடந்தாலும் முதலில் குரல் கொடுப்பவர் தர்ஷனாகத்தான் இருந்தார்.
எல்லோரும் அஞ்சி நடுங்கிய வனிதாவையே தில்லாக எதிர்த்து நின்று கேள்வி கேட்டவர் தர்ஷன். இதனால் மக்களிடம் அவருக்கு என நல்லப் பெயர் கிடைத்தது.
ஒரிஜினாலிட்டியை இழக்கும் தர்ஷன்
நியாயத்தை மறக்கும் தர்ஷன்
இந்நிலையில் கவின், சாண்டி, லாஸ்லியா மற்றும் முகெனுடன் சேர்ந்து கொண்டு தனது ஒரிஜினாலிட்டியை இழந்து வருகிறார். மதுமிதா விஷயத்திலேயே தர்ஷன் நியாயத்தை மறந்து நடப்பது தெரிந்தது.
"இனி பிக் பாஸ் பக்கமே தலை வைத்துகூட படுக்க மாட்டேன்".. எவிக்சனுக்கு பிறகு மதுமிதாவின் முதல் பேட்டி
நியாயத்தை மறக்கும் தர்ஷன்
இந்நிலையில் கவின், சாண்டி, லாஸ்லியா மற்றும் முகெனுடன் சேர்ந்து கொண்டு தனது ஒரிஜினாலிட்டியை இழந்து வருகிறார். மதுமிதா விஷயத்திலேயே தர்ஷன் நியாயத்தை மறந்து நடப்பது தெரிந்தது.
ரசித்த தர்ஷன்
அதோடு பாட்டுப்பாடி மதுமிதா மற்றும் சேரனை கவின் கேங்க் வெறுப்பேற்றிய போதும் அவர்களை எதிர்த்து கேட்காமல், கூடவே சேர்ந்து கும்மியடித்தார் தர்ஷன். எப்போதும் பாத்ரூமுக்குள் உட்காந்துகொண்டு மற்றவர்கள் புறணி பேசுவதை ரசித்து வருகிறார்.
மாறிவிட்ட தர்ஷன்
குறிப்பாக சாண்டியும், கவினும் சேரன் குறித்து தவறாக பேசும்போது அவர்களை நண்பர்கள் என்று எதுவும் கேட்காமல் இருக்கிறார் தர்ஷன். இதுவரை இருந்த தர்ஷன் ஒரு மாதிரியாகவும் இப்போது உள்ள தர்ஷன் ஒரு மாதிரியாகவும் உள்ளனர்.
உதாசீனப்படுத்தும் தர்ஷன்
மேலும் கஸ்தூரி விஷயத்திலும் தர்ஷனின் நடவடிக்கை வேறு மாதிரியாக உள்ளது. கஸ்தூரி என்ன பேசினாலும் நீங்கள் புதிதாக வந்தவர்கள் எதுவும் பேசக்கூடாது என அவரை உதாசீனப்படுத்தி வருகிறார்.
எல்லை மீறும் தர்ஷன்
கவினின் பேச்சைக் கேட்டே தர்ஷன் இவ்வாறு நடந்துகொள்கிறார். மேலும் சேரன் விஷயத்திலும் தர்ஷன் எல்லை மீறி செல்வதாகவே தெரிகிறது.
அவரே புதுசா வந்திருக்காரு
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கஸ்தூரி, தான் எது பேசினாலும், தர்ஷன் தன்னை நீங்கள் புதுசா வந்தவர் பேசக்கூடாது என்று கூறுகிறார் என கமலிடம் கூறினார். இதனைக்கேட்ட கமல், அவரே புதுசா வந்திருப்பவர்தானே என அவர் மாறிவிட்டதை மறைமுகமாக சாடினார். இதனைக் கேட்டு தர்ஷன் முகம் மாறியதை காண முடிந்தது.
மீண்டும் நிரூபித்த கமல்
கமல் இதுபோன்று மறைமுகமாக தாக்குவதில் வல்லவர். வனிதா பிரச்சனையை தூண்டி விடுகிறார் என்பதை தூண்டுகோளாய் இருக்கிறார் என இன்டைரக்ட்டாக கூறினார். அதேபோல் அபியை கூட உங்களுக்கு தெரியாத தல யா என கேட்டு அசத்தினார். பல இடங்களில் கமல், மறைமுகமாக புகழ்வதிலும் சாடுவதிலும் சிறந்த கலைஞர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.