Don't Miss!
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையாது இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உலக நாயகனையே கண்கலங்க வைத்த ஓவியா!
உலக நாயகன் கமலையே தனது நேர்மை, புத்திசாலித்தனம், குழந்தைத்தனம் ஆகியவற்றால் நடிகை ஓவியா கண் கலங்க வைத்துவிட்டார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா குறித்து சினேகன் கூறிய கருத்துகளை கேட்ட கமலும் கண்கலங்கிவிட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 40 நாள்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் அழுக்காச்சி சீரியல்களை மக்கள் மூட்டை கட்டி வைத்து விட்டனர்.
இதற்கு காரணம் நிகழ்ச்சியின் தரம் அல்ல. அதில் பங்கேற்ற நடிகை ஓவியாவின் குணம் என்றால் அதை மறுப்பதற்கில்லை.
மக்கள் மனதை கவர்ந்தார்
தனது குழந்தைத் தனமான பேச்சு, வெகுளித்தனமான ஆட்டம், நறுக் பேச்சு, நேர்மையான செயல்பாடு உள்ளிட்டவற்றால் மக்கள் மனங்களையும், இளசுகளையும் கொள்ளை கொண்டவர் ஓவியா.
மனஉளைச்சல்
சக போட்டியாளர் ஆரவ் தன்னை காதலிப்பதாக நினைத்த ஓவியா, அவர் நட்பாக பழகியதாக கூறியவுடன் மனம் உடைந்தார். மேலும் கடந்த 2 வாரங்களாக பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் ஓவியாவை தனிமைப்படுத்தி வந்தனர். அவரை வெறுத்து ஒதுக்கி வந்தனர்.
தற்கொலை முயற்சி
இதனால் கடந்த வெள்ளிக்கிழமை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான ஓவியா வீட்டை விட்டு வெளியேற விரும்பினார். இதைத் தொடர்ந்து பிக்பாஸிடம் கேமரா மூலம் தெரிவித்து நடவடிக்கை எடுக்காததால் நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலை முயற்சி செய்தார்.
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியேறினார் ஓவியா. அதன்பின்னர் கமலுடன் பேசியபோது ரசிகர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லுமாறு அறிவுறுத்தினர். எனினும் அதை கேட்காமல் அவர் வெளியேறி விட்டார். இதனால் வீட்டில் நடப்பது குறித்து அத்தனை ரூம்மேட்ஸ்களிடமும் கமல் தனித்தனியாக விசாரணை நடத்த தொடங்கினார்.
ப்ரோமோவில் கண் கலங்கிய கமல்
நேற்று வெளியான ப்ரோமோவில் சினேகனிடம் ஓவியா குறித்து கேட்டபோது, ஓவியா இப்படி ஆவார் என்று எனக்கு ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால், நான் சத்தியமாக ஓவியா பக்கம் நின்றிருப்பேன். ஏனெனில் அவள் இதுவரை பொய் கூறியது இல்லை. எதையும் ஈசியாக எடுத்துக் கொள்வார் என ஓவியாவைப் பற்றி பேசிக் கொண்டிருந்த பொழுது சினேகன் அழ ஆரம்பித்தார். அதைப் பார்த்த கமல்ஹாசனுக்கும், கண்ணில் கண்ணீர் வர ஆரம்பித்தது.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!