Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
kanmani serial: வயித்துல மூணு மாசம்... ஆனா துபாய் போயி ஏழெட்டு மாசமாம்!
சென்னை: திருடத் தெரிந்தாலும் தெத்த தெரியணும் என்பார்கள். சன் டிவியின் கண்மணி சீரியலில் இது தெரியாத முத்துச்செல்வி, வயித்துல குழந்தை மூணு மாசம் என்றும்.. புருஷன் துபாய் போயி அது ஆச்சும்மா ஏழெட்டு மாசம் என்றும் சொல்றா. பாவம்... வெள்ளந்தியான பெண் என்று சொல்ல வச்சு இருக்கு இந்த காட்சி.
கண்மணி சீரியல் 400 வது எபிசோட் கடந்து வெற்றி நடைபோட்டுக் கொண்டு இருக்கிறதாம். இதைக் கொண்டாடும் விதத்தில் அதில் நடிக்கும் நட்சத்திரங்கள் பேசி உள்ளனர். எந்த தொலைக்காட்சி சானல்களாகட்டும், சீரியல் என்று ஒன்றை ஆரம்பித்து விட்டதோடு அவர்கள் வேலை நின்று விடுகிறது.
பார்க்கும் சீரியல் ஆர்வலர்கள் அதற்கு வரவேற்பு கொடுத்து, 100வது எபிசோட், 200 வது எபிசோட் என்று கடக்க வைத்து விடுகிறார்கள். மக்களின் ஆதரவை உணர்ந்து அவர்களுக்கும் பொழுதை நல்ல விதத்தில் போக்கும்படி சீரியல்களை இயக்க வேண்டும் என்பது மட்டும்தான் கூற வேண்டியதாக இருக்கிறது.
முத்துச்செல்வி வாடகைத் தாய்
வாடகைத்தாயா இருப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல... அதை வெள்ளந்தியான முத்துச்செல்வி ஏற்று இருப்பது, அதை சமாளிக்கத் தெரியாமல் அவள் திணறும் விதம் என்று நன்றாக சீரியல் காட்சிகளைக் கொண்டு சென்று இருக்கிறார்கள். வாடகைத்தாய் விஷயத்தில் மனைவியை வாடகைத் தாயாக்கி ஃபிராடுத்தனம் செய்யும் ரேவதியை இந்த விஷயத்தில் இருந்து நீங்க விலகிக்கோங்க என்று சொல்லி தான் வாடகைத் தாயா இருப்பது முதல் முத்துச்செல்வி பார்ப்பவர் மனதில் இடம்பிடித்து விடுகிறாள்.
அட கூறு கெட்ட குக்கரே.. சோறு ஆக்க கிளம்புனது குத்தமாய்யா.. மணிமேகலை பரிதாபங்கள்!
ஒரு வார்த்தை சொல்லி
முத்துச்செல்வியை வாடகைத்தாயா இருக்கத் தகுதியானவளா என்று செக் செய்யும் டாக்டர் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்று சீரியல் பார்ப்பவர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால், அதை ஏனோ அவர்கள் பெரிய விஷயமாக எடுத்துக்கலை முந்தானை முடிச்சு படம் வந்தபோது, ஊர்வசி குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துக்க போவாங்க. ஆனால், அவர் உண்மை நிலையை டாக்டர் கண்டுபிடிச்சு ஆபரேஷன் செய்யாம திருப்பி அனுப்பிடுவாங்க. அதே போல முத்துச்செல்வி இன்னும் கல்யாணம் ஆகாதவ என்று கண்டுபிடிச்சு டாக்டர் சொல்லுவாங்கன்னு நினைச்சா அது இல்லை.
கல்யாணம் குழந்தை
கல்யாணமாகி குழந்தை பெத்துக்கிட்ட ஒரு பெண்ணைத்தான் கண்ணன் சவுந்தர்யா குழந்தைக்கு வாடகைத்தாயா வச்சு இருக்கோம்னு இன்னும் டாகடர் நம்பிகிட்டு இருப்பதும், பார்ப்பவர்களை நம்ப வச்சு இருப்பதும் முட்டாள்தனத்தின் உச்சம். இதை எல்லாம் மறக்க வைக்கும்படியாக முத்துச்செல்வி வாடகைத் தாயா இருந்து படும் கஷ்டங்கள் இருக்கு.
விஜயலட்சுமி நாத்தனார்
முத்துச்செல்வியின் நிலைமையை அறிய அவள் வாயைப் பிடுங்கும் நாத்தனார், உன் புருஷன் எங்கே என்று கேட்க, அவர் துபாய் போயிட்டாரும்மான்னு சொல்றா முத்துச்செல்வி. எப்போ போனார்னு அந்தம்மா கேட்க, அது ஆயிருச்சும்மா ஏழெட்டு மாசம்னு சொல்றா. என்ன முத்து, உன் வயித்துல இப்போத்தான் குழந்தை உண்டாகி மூணு மாசம்னு சொன்னே.. அவர் துபாய் போயி ஏழெட்டு மாசமாச்சுன்னு சொல்றேன்னு பீதியைக் கிளப்பறாங்க. பாவம்தான் அந்த அப்பாவிப் பொண்ணு.