twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Kanmani serial: விசுவாசம் என்றால் இப்படித்தான் இருக்கோணும்!

    |

    சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் பிக் பாஸ் கமல் சொன்ன மாதிரி முக்கோண காதல். இதில் யார் விழித்துக் கொள்கிறார்களோ அவர்கள் பிழைத்துக் கொண்டார்கள் என்று விட்டுவிட முடியாது. தீர்வு என்பதை மிகச் சரியாக சொல்ல வேண்டும்.

    அதற்கு விட்டுக் கொடுக்க ஒருவர் தயாராக இருக்க வேண்டும். என்றாலும் விட்டுத் தருபவர்களுக்கு மனதில் வலி என்று ஒன்று இல்லாமல் இருக்க முடியாது என்று யாரால் உறுதி தர முடியும்.

    இப்போது கண்மணி சீரியலில் அந்த வலியை ஏற்றுக்கொண்டு இருப்பவள் முத்துச்செல்வி. இதே வலியை தான் எடுத்துகொள்ள சவுந்தர்யாவும் முயற்சித்தாள்... என்றாலும், அதில் சுவாரஸ்யம் இல்லை.தோல்வியை நோக்கித்தான் சென்று கொண்டு இருக்கிறது.

    சின்னவர் முத்துச்செல்வி

    சின்னவர் முத்துச்செல்வி

    முத்துச்செல்வி சொந்த ஊரில், மாயன் பிரச்சனை செய்துவிட, வேறு ஊருக்கு சென்று பிழைக்கலாம் என்று அப்பா வீரையனுக்கு தைரியம் சொல்லி, தங்கை தங்க செல்வியையும் அழைச்சுக்கிட்டு, சின்னவரு இருக்கும் ஊருக்கு பிழைக்க வர்றாங்க. சின்னவரே தங்குவதற்கு தோப்பு வீட்டையும் கொடுத்து தோப்பை கவனித்துக் கொள்ளும் வேலையையும் தர்றார் லொடலொடவென்று பேசும் முத்துச்செல்வி சந்தைக்கு போகையில் சின்னவருடன் போனவள் அங்கு அவருடன் ஒரு போட்டோவும் எடுத்துக்கறா.

    வில்லங்கம் போட்டோவில்

    வில்லங்கம் போட்டோவில்

    தமிழ்ச்செல்விக்கும், சின்னவருக்கும் போட்டோவில் ஆரம்பிக்குது வில்லங்கம். சின்னவர் வீட்டில் இருக்கும் அக்கா பெண்களின் மாப்பிள்ளைகள் இருவரும் சின்னவர் முத்துச்செல்வியுடன் இருக்கும் போட்டோவை கைப்பற்றி, ஊர் முழுக்க இந்த போட்டோவை போஸ்டர் அடிச்சு ஒட்டிடறாங்க. ஊர் முழுக்க பேச்சு.. முத்துச்செல்வியின் அப்பா இனிமேல் எப்படி உயிரோட இருப்பதுன்னு மான அவமான முடிவுக்கு வந்துட்டார், சின்னவர் முத்துவை நானே கட்டிக்கறேன்னு வாக்கு குடுத்துடறார்.

    காதல் பூத்த தருணம்

    காதல் பூத்த தருணம்

    சவுந்தர்யாவுக்கு அப்போதுதான் தன்னுடைய தாய் மாமா மீது காதல் பூத்த தருணம். அதை சொல்லலாம் என்று வீட்டார் கண்ணனுக்காக காத்திருக்க, முத்துச்செல்விக்கு சின்னவராக தான் கொடுத்த வாக்கு பற்றி கூறுகிறான். அப்படியே தந்தை தாயை அடக்கி விடுகிறாள் சவுந்தர்யா. அன்றிலிருந்து தன் மனதில் ஒன்றும் இல்லாதபடி சவுந்தர்யா தன்னை முத்துச்செல்வியிடம் காண்பித்துக் கொள்கிறாள்.

    உண்மை விபத்தில்

    உண்மை விபத்தில்

    சவுந்தர்யா மனசில் கண்னன் மாமா இருப்பதும், அவளுக்கு ஒன்று என்றால் கண்ணன் துடிப்பதையும் கண்ட முத்துச் செல்விக்கு சந்தேகம் வந்துருது. அதுக்கு ஏத்த மாதிரி, சவுந்தர்யாவின் முன்னாள் காதலன் ஆகாஷும் முத்துவிடம் உண்மையை சொல்ல, சின்னவர் சவுந்தர்யா அம்மாவுக்குத்தான் சரி என்று அதிரடியாக முடிவு எடுக்கிறாள் அவள்.அதன்படி செம அதிரடியாக காய்களை நகர்த்துகிறாள்.

    மனதில் உறுதி

    மனதில் உறுதி

    தனது முடிவில் மிக உறுதியாக இருக்கும் முத்துச்செல்வி, மனதிலும் உறுதி கொண்டவளாக பெரிய அம்மாவை அடிக்கடி மரியாதை இல்லாமல் பேசி, அவர்கள் பெயரில் இருக்கும் இந்த பங்களாவை எழுதி வாங்க துடிக்கும், கிருஷ்ணவேணி அம்மாவுக்கும் பாடம் கற்றுத் தந்துவிட்டு இந்த ஊரைவிட்டு கிளம்ப வேண்டும் என்று நினைத்து அதன் படி செயல்படுகிறாள்.

    எஜமானி அம்மா தினம் தினம் கிருஷ்ணவேணி அம்மாவால கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க. அதுக்கும் ஒரு முடிவு கட்டிட்டுத்தான் இங்கிருந்து நாம போகனும்னு உறுதியா இருக்கேன் அப்பான்னு முத்துச்செல்வி சொல்லும்போது விசுவாசம் என்றால் இதுதான் என்கிற உணர்வு நமக்குள் வருது.

    English summary
    Sun TV's kanmani Serial Big Bass Triangle Love Like Kamal sir. Whoever wakes up in this, they can leave. The solution must be very precise.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X