Don't Miss!
- News தமிழ்நாட்டைச் சுற்றிச் சுற்றி 8 போட்ட பிரதமர் மோடி! முதல் பிரமர் இவர்தான்! பிளான் என்ன தெரியுமா?
- Lifestyle 200 கோடி சொத்துக்களை தானம் கொடுத்துவிட்டு சமண துறவியாகப் போகும் குஜராத் தம்பதி... காரணம் என்ன தெரியுமா?
- Finance ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் போதும்.. பல மடங்கு ரிட்டர்ன்.. பெண்கள் நோட் பண்ணுங்க.. அசத்தல் திட்டம்
- Technology அடிச்சு புடிச்சு ஆர்டர்.. ரூ.13,499 பட்ஜெட்ல 108MP கேமரா.. BYBASS சார்ஜிங்.. 2TB மெமரி.. எந்த மாடல்?
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Automobiles பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
Kanmani serial: முத்துச்செல்விக்கு இப்படி காட்சி வைக்கலாமா... பெண்களை இழிவு செய்வது போல!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் முத்துச்செல்வி சவுந்தர்யாவின் அக்கா ஆரத்தி எடுக்கும் தட்டை அத்தனை பேர் முன்னிலையில் தட்டி விடுவது ரொம்ப அநாகரீகமான செயலாக இருக்கிறதது.
முத்துச்செல்வி செய்வதைப் பார்த்தால் சின்னவரை காதலிக்கும் சவுந்தர்யா அம்மாவுக்கு அவரை விட்டுக் கொடுத்து விடுவாள் போலும் என்று எண்ணத் தோன்றினாலும், அதற்காக இப்படி ஒரு ரீயாக்ஷன் இருக்கக் கூடாது.
எவ்ளோ பெரிய குடும்பம், முத்துசெல்வியை இதுவரை அதிர்ந்து எதுவும் பேசாத சவுந்தர்யாவின் அப்பா. அவரின் முன்னால் முத்துச்செல்வி ஆரத்தி தட்டை தட்டிவிடுவது போல ஒரு காட்சியை அமைத்து இருப்பது முகம் சுளிக்க வைக்கிறது.
முத்துச்செல்வி குடும்பத்தை
சவுந்தர்யாவுக்கு தோப்பில் இருக்கும் பம்ப்செட் தொட்டியில், மின்சாரம் ஷாக் அடித்து தூக்கிப் போட்டு உயிருக்கே ஆபத்தாக முடிகிறது.இது முத்துச்செல்வி வீட்டின் எதிரி மாயன் முத்துசெல்விக்கு பார்த்த வேலையில் சவுந்தர்யா மாட்டிகிட்டு, உயிருக்கு போராடி மீண்டு வருகிறாள். இந்த சமயத்தில் சவுந்தர்யா கூடப் பிறந்த அக்காக்கக்கள் ரெண்டு பேருக்கும் முத்துச்செல்வி மீது கோபம் வருது. முத்துச்செல்வி, அவள் தங்கை, அப்பா மூணு பேரையும் வீட்டை விட்டு விரட்டி அடிக்கறாங்க. அது தப்புதான்.
கோபம் வரலை
அந்த இரவு நேரத்தில் எங்காவது போயிடலாம் என்று சொல்லி, கையில் பணமில்லாமல் லாரியில் ஏற்றி சென்ற அப்பா மீது முத்துச்செல்விக்கு கொஞ்சம்கூட போவம் வரலை. இல்லை, இந்த நேரத்தில் நம்ம போறது தப்புப்பா..கோயில் பக்கம் போயி இருந்துட்டு, காலையில் ஊரை விட்டு கிளம்பலாம் .சின்னவருகிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு சொல்ல முத்துச்செல்விக்கு அனுபவம் போதாதா என்ன? மாயனிடம் ஏற்கனவே பல தொல்லைக்கள் அனுபவித்து வருபவள்தானே... என்ன இருந்தாலும் அவங்க வீட்டு பொண்ணு சாகக் கிடக்கும்போது, குடும்பத்தில் வேண்டாதவர்கள் ரீயாக்ஷன் அப்படித்தானே இருக்கும்.
கண்ணனும் சவுந்தர்யாவும்
கண்ணனும்,சவுந்தர்யாவும் கஷ்டப்பட்டு கண்டு பிடித்து, முத்துசெல்வியையும், தங்கையையும் மீட்டு வரும்போது, சின்னவரு குடும்பமே ..அதுவும் விஜயலாட்சுமி அம்மாவின் கணவர் பெரியவர் முதற்கொண்டு, ஆரத்தி எடுத்து வரவேற்கும்போது, வேண்டாம் என்று சொல்லி இருக்கணும், இல்லையா பேசாமலே உள்ளே போயிருக்கணும். ஆரத்தி தட்டை ஒரு சின்ன பெண் தட்டி விட்டு கோபப்படுவது டூ... டூ... மச். விஜயலட்சுமி அம்மா என்று வாய் கிழிய பேசியதும், பெரிய ஐயா என்று வாய் கிழிய பேசியதும் அந்த வீட்டில் வாழப் போகிறோம் என்பதால் மட்டும்தானா?
கண்ணன் மாமாவை
கண்ணன் மாமாவை சவுந்தர்யா லவ் பண்ணுகிறார் என்று தெரிந்ததும், சின்னவரை விட்டுக் கொடுக்க நினைத்து, இனிமேல் இந்த வீட்டில் நாம் வாழவா போகிறோம் என்றதும், சோத்துல உப்பு போட்டு திங்கறோம்னு நினைவு வருது போலும்.என்ன இருந்தாலும் பெரியவர்கள் முன்னால் முத்துச்செல்வி கதாபாத்திரம் ஆரத்தி தட்டை தட்டிவிட்டது பெரிய பிழை. இது மாதிரி பெண்கள் ஆக்ரோஷப் படுவது போல காட்சிகளை இனிமேலாவது தவிர்த்தால் நன்றாக இருக்கும்.
ஒரு ஆணே கூட இதுபோன்ற காரியங்களை செய்ய மாட்டான்.பெண்களை இப்படியும் இழிவு படுத்தலாம் என்பதைத்தான் இது போன்ற காட்சிகள் உணர்த்துகின்றன.