Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பாரதி கண்ணம்மா ரோஷினியின் கருப்பு வேதனை... அதுவே இன்றைய சாதனை!
Recommended Video
சென்னை: விஜய் டிவியின்பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்திருக்கும் நடிகையின் பெயர் ரோஷினி.
இவர் பிறந்தது, வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னையில்தான்.மொத்தத்தில் இவர் சென்னை பொண்ணு.
எத்திராஜ் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த இவர் தன் நிறத்தால் சந்தித்த வேதனை சாதனைகளை சொல்கிறார் ரோஷினி.
கல்லூரியிலும் பள்ளியிலும்
பள்ளியில் படிக்கும்போதே தனது நிறம், தலைமுடி பற்றி கலாய்த்தவர்கள்,ஏளனமாக பேசியவர்கள் அதிகம். என்னவோ எனக்கு அதெல்லாம் பெரிசா தெரியலை. நம்ம அழகு இல்லைன்னு மனசு வருத்தமா இருக்கும். அதோட அந்த வருத்தம் முடிஞ்சு போச்சு.
அதிகமா கல்லூரியில்
அதிகமாக கல்லூரி நாட்களில் அவமானப்பட்டு இருக்கேன். என் தலை முடி கூட என் பேச்சு கேட்காத மாதிரி முரட்டுத் தனமா இ ருக்கும். அதையும் வச்சு கலாய்ப்பார்கள். ஒரு நாள் என்னை நானே கண்ணாடியில் பார்த்து...நாம அவ்ளோ அசிங்கமாவா இருக்கோம்னு யோசிச்சேன்.
இவ்வளவு அழகு கண்களா
என்னோட கண்கள் இவ்ளோ அழகா இருக்கான்னு அப்போதுதான் யோசிச்சேன். என்னையே நான் அழகுன்னு கண்ணாடியில் பார்த்து சொல்லிக்குவேன்.உண்மையில் என் கண்கள் அழகாத்தான் இருந்துச்சு.அதுக்கு அழகா மை வச்சு எடுப்பா இருக்கற மாதிரி செய்தேன்.
உன் கண்ணு அழகுடி
தோழிகள் எல்லாம் உன் கண்ணு இவ்ளோ அழகா இருக்குடி.. இப்படியே உன்னை நீ அழகு படுத்திக்கோ... நிஜமா நீ அழகுதான்னு தோழிகள் ஊக்குவிச்சாங்க. சருமத்தின் நிறத்தை மாத்த முடியாது. ஆனா, இதே நிறத்தை நல்லா மிளிர செய்ய முடியும்னு சருமத்துக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட ஆரம்பிச்சேன்.
ஜ்வெல்லரி ஹேண்ட் மேட
படிச்சு முடிச்சு நல்ல கம்பெனியில வேலை பார்த்தேன்..அது எனக்கு ஒத்து வரலை..நானே ஹேண்ட் மேட் ஜ்வெல்லரி செய்து, ஆன் லைன் மூலமா அதை விற்பனை செய்து வந்தேன். என்னோட ஜ்வெல்லரிக்கு நானே மாடலாகவும் இருந்து போட்டோ நானே எடுத்து போட்டுக்குவேன்.
வாய்ப்பு கிடைச்சுது
ஹேண்ட் மேட் நகைகள் அவ்வளவா விற்பனை ஆகி என் வாழ்க்கை மேல் தரத்துக்கு உயரும்ன்னு எனக்கு தோணலை. நான் மாடலாக இருந்ததில் நானும் சினிமாவில், சீரியல்களில் நடிக்க முடியும்னு நம்பிக்கை வந்துச்சு.ஆடிஷனுக்கு போவேன். என்னை ஒரு மாதிரி பார்த்தாலும் கவலைப்பட மாட்டேன்.
நிறம் சினிமாவில்
சினிமா ஆடிஷனில் நிறத்தைப் பார்த்து ஒதுக்குவது இன்னும் அதிகமாத்தான் இருக்கு. கருப்பு வெள்ளை கால படங்களில்கூட அப்படி இருந்ததில்லை என்று சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன். என்னோட மாடல் போட்டோவைப் பார்த்துதான் பாரதி கண்ணம்மா சீரியல் வாய்ப்பு கிடைச்சது.
கருத்து சொல்ல கதை
நான் சொல்ல வேண்டிய கருத்துக்களை இந்த பாரதி கண்ணம்மா சீரியல் கதை சொல்லுது. இது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். என்னை பொருத்த வரைக்கும், சருமம் ஆரோக்கியமாக இருந்தாலே எல்லாப் பெண்கழும் அழகுதான். நிறத்தில் அழகு இல்லை.