Don't Miss!
- News மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை.. ஐசியூவில் திடீர் அட்மிட்.. தற்போது எப்படி இருக்கிறார் மன்சூர்?
- Sports அவர் ஒருவரை தவிர மற்ற ஸ்பின்னர்களுக்கு பயம் .. 120 கிமீ வேகம் அவசியமா.. வருணை பொளந்த ஹர்பஜன் சிங்!
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அண்ணியுடன் முதல் முறையாக நடிக்கிறேன்.. கார்த்தி ஹேப்பி டிவீட்
Recommended Video
சென்னை: நடிகர் கார்த்தி தனது அண்ணி ஜோதிகாவுடன் பாபநாசம் திரைப்பட இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதையடுத்து மிகவும் மகிழ்ச்சியாக படத் தொடக்கம் குறித்த தகவலை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
சூர்யா, கார்த்தி இதுவரை இணைந்து நடித்ததில்லை. அதேபோல தனது அண்ணி ஜோதிகாவுடன் ஒ ரு படத்தில் கூட கார்த்தி நடித்ததில்லை. இந்த நிலையில் முதல் முறையாக வெள்ளித்திரையில் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர். இதை மகிழ்ச்சிகரமாக டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் கார்த்தி.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், முதன் முறையாக அண்ணியுடன் வெள்ளித் திரையில் நடிக்கும் எனக்கான இடத்தை பகிர்ந்துக்க ஆவலா இருக்கேன்.
ரொம்ப எதிர்பார்ப்பு.. திரில்லிங்கா இருக்கு. ஜித்து ஜோசப் சார் உடன் பணிபுரிவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.. சத்யராஜ் சார் எங்களுக்கு படத்துக்கு ரொம்ப பலமா இருப்பார்னு சொல்லணும்.. உங்கள் எல்லா ஆசீர்வாதங்களுடன் இன்று படப்பிடிப்பு... என்று பதிவிட்டுள்ளார்..
கார்த்திக்கு இந்த ஒரு தருணம் நடிப்பு பயணத்தில் நலல மார்க் செய்யும்.. திரையில் ஜோ உடன் உன்னைப் பார்க்க மிகவும் உற்சாகமாக. காத்திருக்கிறேன். திரைப்பட அணிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.. வாழ்த்துக்கள் என்று மகனின் ட்வீட்டுக்கு சிவகுமார் பதில் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
Thrilled to share screen space with Anni for the first time :) & looking forward to work with #JeethuJoseph sir. #Sathyaraj sir brings more strength to us. With all your blessings shoot begins today. #Jyotika @govind_vasantha @rdrajasekar @ansononline #ParallelMindsFilms pic.twitter.com/uqPWoCnygr
— Actor Karthi (@Karthi_Offl) April 27, 2019
நடிகை ஜோதிகா திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார். பிறகு விளம்பர படங்களில் நடித்தார்.அடுத்து 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் திரைத்துறைக்கு வந்தார். அந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
கார்த்தி, ஜோ சேர்ந்து நடிக்க இருக்கும் படத்தைப் பார்க்க ரசிகர்கள்தான் ஆவலாக இருக்கின்றனர் என்று பார்த்தால், அவரது குடும்பமே பெரும் ஆவலுடன் காத்திருக்கிறது என்பதை அப்பா சிவகுமாரின் ட்வீட் தெரிவிக்கிறது.