கவினுக்கு பேர்ல வின் இருந்தாலும் மனசு முழுக்க லாஸதான் விரும்புது.. பத்தவச்சீட்டியே பரட்ட!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாகியுள்ள கஸ்தூரி நன்றாகவே பற்ற வைத்து வருகிறார்.
பிக்பாஸ் வீட்டின் முதல் வைல்டு கார்டு போட்டியாளராக நேற்று என்ட்ரி கொடுத்தார். வந்த உடனே சேட்டையை தொடங்கிவிட்டார் கஸ்தூரி.
டிஸைன் டிஸைனாக ஒவ்வொருவருக்கும் பனீஷ்மென்ட் கொடுத்தார். சேரன் உட்பட எல்லோரையும் கேப்பில் செமயாக கலாய்த்தார் கஸ்தூரி.

விளாசிய கஸ்தூரி
இதனால் வந்த முதல் நாளிலேயே ரசிகர்களின் அப்லாஸை அள்ளினார். இதனைத் தொடர்ந்து இன்று வெளியான முதல் புரமோவில் கவினிடம் நான்கு பெண்களை காதலித்தது சரியா என்றும் கேள்விகளை கேட்டு விளாசினார்.

பாராட்டு
கஸ்தூரியின் இந்த அதிரடியால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்காக அவரை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

வில்லுப்பாட்டு
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் வில்லுப்பாட்டு படிக்கிறார் கஸ்தூரி.

பத்தவச்சீட்டியே பரட்ட
அப்போது பத்த வச்சீட்டியே பரட்ட என ஒருத்தர் பத்த வைக்கிறதுக்காக பிக்பாஸ் வீட்டுக்குள்ள வைல்டு கார்டு என்ட்ரியாக கஸ்தூரி வந்திருக்காங்க என பாட, குழுவினர் ஆமாம் போடுகின்றனர்.

மனசு முழுக்க லாஸ்
தொடர்ந்து பாடும் கஸ்தூரி, கவினுக்கு பேர்ல வின்னு இருந்தாலும் மனசு முழுக்க லாஸதான் விரும்புது.. அது என்ன பிரச்சனையோ தெரியல என வில்லுப்பாட்டு டோன்லேயே பாடுகிறார் கஸ்தூரி.

ஓ போடுங்க
இதைக்கேட்ட ஹவுஸ்மேட்ஸ்கள் கலகலவென சிரிக்க, எல்லோரும் லாஸ்லியாவுக்கு ஒரு ஓ போடுங்க என என்று கூறுகிறார் கஸ்தூரி. ஹவுஸ்மேட்ஸ்களுக்கு தெரியாத அல்லது தெளிவாகாத பல விஷயங்களை பட்டென சபையில் போட்டுடைத்துவிட்டார் கஸ்தூரி.

பயத்தில் கவின்
இதனால் கஸ்தூரியை கண்டாலே கவினுக்கு டர் ஆகிறது. இந்த அம்மா என்னத்த கொளுத்தி போட போகுதோ என்ற பயத்திலேயே கவின் இருப்பது அவருடைய முகத்தை பார்த்தாலே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











