தமிழ்பெண் என்றுகூறி அபியை எப்படி தனிமைப்படுத்தலாம்? வரிந்து கட்டிக்கொண்டு வந்த கவின்!
சென்னை: தமிழ்பெண் என்று கூறி மற்றவர்களை எப்படி தனிமைப்படுத்தலாம் என மதுமிதாவிடம் கவின் போட்ட சண்டை பிக்பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
முகெனுக்கும் தனக்கும் பிறந்த குழந்தை என அபிராமி தண்ணீர் பாட்டிலை குழந்தையாக வைத்துக்கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதனை தவறு என்று கூறியதால் ஒட்டு மொத்த ஹவுஸ்மேட்ஸின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளார் மதுமிதா.
தமிழ் பெண் என மதுமிதா கூறியதை பொறுத்துக்கொள்ள முடியாத கவின், எப்படி அப்படி கூறலாம் என மதுமிதாவிடம் மல்லுக்கட்டினார். தமிழ்பெண் என்று கூறி அவர்களை தனிமை படுத்தக்கூடாது என்றும் அவர் கூறினார்.

பரபரப்பு
நீ எப்படி தமிழ்பெண் என சொல்லலாம் என்றும் கவின், முரட்டுத்தனமாக நடந்துகொண்டார். இதனால் பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிரியமாக உள்ள கவின்
ஏற்கனவே கவினை காதலிப்பதாக அபிராமி கூறியிருந்தார். இதுவரை அபிராமியின் காதலை ஏற்காமல் உள்ளார் கவின். ஆனால் அபிராமியின் மீது பிரியமாகதான் உள்ளார்.

3 பேரை ஓட்டி வரும் கவின்
அதே நேரத்தில் ஷெரின், சாக்ஷி, அபிராமி என மூன்று பேரையும் ஒரே நேரத்தில் ஓட்டி வருகிறார் கேட்டால் விளையாட்டு என்கிறார். கவின் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் செல்வதற்குள் என்ன நடக்குமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

உனக்கு என்ன?
இந்நிலையில் மதுமிதா தமிழ்பெண் என்ற கூறியவுடன் அவர்களை எப்படி தனிமைப்படுத்தலாம் என கவின் வாக்குவாதம் செய்தார். மேலும் பெயர் கெட்டுப்போகும் என கவலைப்பட வேண்டிய முகெனே அமைதியாக இருக்கும்போது உனக்கென்ன என்றும் அவர் கூறினார். இதனால் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications











