Don't Miss!
- News கோவையில் மறுவாக்குப்பதிவு நடத்தணும்.. 1 லட்சம் வாக்குகளை காணோம்.. அண்ணாமலை பரபர புகார்!
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அதிர்ச்சி.. பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து கவினை ஓங்கி அறைந்த நண்பர்.. பீதியில் உறைந்த ஹவுஸ்மேட்ஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று கவினை சந்திக்க வந்த அவரது நண்பர், பளார் என கன்னத்தில் அறைந்தது ஹவுஸ்மேட்ஸ் மட்டுமின்றி பார்வையாளர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஃபிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியார்கள் அவர்களின் குடும்படுத்தினரை சந்திக்க பிக்பாஸ் ஏற்பாடு செய்துள்ளார்.
அதன்படி ஒவ்வொரு நாளும் ஒரு போட்டியாளரின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து செல்கின்றனர். இதுவரை முகென், லாஸ்லியா, சேரன், தர்ஷன், வனிதா ஆகியோரின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து சென்றுள்ளனர்.
பெற்றோர் சிறையில்
அந்த வகையில் இன்று கவினுக்கு சப்போர்ட்டாக ஒருவர் வந்திருப்பது புரமோவில் தெரியவந்துள்ளது. கவினின் பெற்றோர் சீட்டுக்கம்பெனி நடத்தி மோசடி செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய கடமை
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருப்பது கவினின் நண்பர் என கூறப்படுகிறது. கவின் மற்றும் ஹவுஸ்மேட்ஸ்களுடன் பேசினார். புறப்பட தயாரான அவர், ஒரு முக்கியமான கடமை பாக்கியிருக்கிறது என்றார்.
நம்புனவங்கள ஏமாத்திட்ட
தொடர்ந்து, பிரீஸில் இருந்த கவினின் முன்பு சென்ற அவர்,நீ மட்டமா விளையாடுன கேமுக்கு, நீ இவ்வளவு மட்டமா பண்ண வேலைக்கு, உன்ன நம்புனவங்கள ஏமாத்துனதுக்கு ஒன்னு செய்யலாம் என்றிருக்கேன் என்றார்.
பளார் என ஒரு அறை
நீ டைட்டில் ஜெயிச்சிட்டு, பெரிய ஆளா ஆயிட்டன்னா, என்னை ஸ்டேஜ்ல அழைத்து அடிச்சுக்கோ என்று கூறி பளார் என்று ஓங்கி அறைந்தார். இதனை கண்ட சக ஹவுஸ்மேட்ஸ் ஆவென வாயை திறந்து தங்களின் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.