அடிச்சு சாவடிச்சிடுவேன்.. சாக்ஷியிடம் எகிறிய கவின்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை எதிர்த்து பேசிய சாக்ஷியை அடிச்சு சாவடிச்சுடுவேன் என கவின் எகிறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினும் சாக்ஷியும் ஒருவருக்கொருவர் காதலிப்பதாக கூறி பழகி வந்தனர். கவின் ஒரே நேரத்தில் லாஸ்லியாவிடமும் நெருக்கம் காட்டினார்.
இதனால் அவர்களுக்குள் மனக்கசப்பு, விரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களின் காதல் முறிந்ததாக கூறினார் சாக்ஷி.

நெருக்கம் குறையவில்லை
லாஸ்லியாவும் எங்களின் உணர்வுகளோடு விளையாடுகிறாய் என்று டயலாக்கெல்லாம் பேசி கவினை திட்டினார். ஆனாலும் இருவருக்குள்ளும் உள்ள நெருக்கம் மட்டும் குறைந்தபாடில்லை.

சேரனை இழுத்துவிட்டார்
டாஸ்க்கில் ரூல்ஸை பிரேக் செய்ததாக லாஸ்லியாவும் அபிராமியும் ஜெயிலுக்கு சென்றார்கள். லாஸ்லியா ஜெயிலுக்கு போவதை தாங்கிக்கொள்ள முடியாத கவின் சேரனை இழுத்துவிட்டார்.

ஆமாம் சாமி போட்ட கவின்
மேலும் டாஸ்க்கில் சுவாரசியமாக செய்யவில்லை என்று சாக்ஷி பெயரையும் ஷெரின் பெயரையும் மீரா கூறினார். அதற்கு ஆமாம் சாமி போட்ட கவின் சாக்ஷி மற்றும் ஷெரின் ஆகியோரின் பெயரை வழிமொழிந்தார்.

சாக்ஷி ஆர்க்யூ
இதனால் கடுப்பான ஷெரின் கவினிடம் ஆர்க்யூ செய்தார். இதைத்தொடர்ந்து வந்த சாக்ஷி, நான் என்ன சுவாரசியமாக செய்யவில்லை சொல்லு என்று கேட்டார். கவினை பேசவிடாமல் தொடர்ந்து பேசினார் சாக்ஷி.

அடிச்சு சாவடிச்சுடுவேன்
இதனால் கோபப்பட்ட கவின், சாக்ஷியை பயங்கரமாக கத்தினார். மேலும் சாக்ஷியை அடிச்சு சாவடிச்சுடுவேன் என்று சத்தமாக சாக்ஷியை திட்டித் தீர்த்தார். இதனால் அழ ஆறம்பித்து விட்டார் சாக்ஷி.

கவினின் பெரும் கவலை
தன்னிலை மறந்து கவின் கத்தினார். இதேபோல் மீராவிடமும் கத்தினார் கவின். நேற்றைய எபிசோடில் சேரனை ஜெயிலுக்கு அனுப்பாததுதான் கவினுக்கு பெரும் கவலையாக இருந்தது.


Click it and Unblock the Notifications











