Don't Miss!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவின்.. இப்போ எங்கே இருக்கார் தெரியுமா?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கவின் தற்போது ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் 100 நாட்களை கடந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அறிவிப்பு நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு சீசன்களை போலவே இந்த சீசனிலும் 5 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டு யார் இந்த பணத்துடன் இப்போதே வெளியேற போகிறீர்கள் என்று கேட்டார் பிக்பாஸ்.
மீண்டும் கிடைக்காது
ஏற்கனவே கடனை அடைக்கதான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததாக கூறிய கவின், இந்த வாய்ப்பை லட்டு போல பயன்படுத்திக்கொண்டார். பேமென்ட் இல்லாமல் 5 லட்சம் ரூபாய் கிடைம்போது அதனை எடுத்துக்கொள்வதே புத்திசாலித்தனம் என்று எண்ணிய கவின், இந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்காது என்று கூறிவிட்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
சிறையில் அடைப்பு
ஏற்கனவே, கடன் பிரச்சனையால் அப்பா ஒரு பக்கம், அம்மா ஒரு பக்கம் என நண்பர்கள் வீட்டில் விட்டுவிட்டு வந்திருப்பதாக கூறினார் கவின். கவினின் தாயார் சீட்டுக்கம்பெனி மோசடி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பின்படி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விஜய் டிவி பிரஸ்மீட்
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவினை, நிகழ்ச்சிக்குழு ஹோட்டலில் தங்கவைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர்கள், விஜய் டிவி ஏற்பாடு செய்யும் பிரஸ்மீட்டில் பங்கேற்ற பின்னரே மற்ற நிகழ்ச்சிகிளில் பங்கேற்க முடியும்.
பிக்பாஸ் குழு
இது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒப்பந்தத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெற்றோர் குறித்த தகவல் தெரிந்தால் கவின் நிச்சயம் வெளியேறிவிடுவார், நிகழ்ச்சி குறித்த தகவல்கள் வெளியாகிவிடும் என்பதால் கவினை பிக்பாஸ் நிகழ்ச்சி குழு ஹோட்டலில் தங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஃபைனல் வரை?
நாளை கமலை சந்திக்கும் வரை கவின் ஹோட்டலில் தங்க வைக்கப்படுவார் என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனல் வரை ஹோட்டலில் தங்க வைக்கப்படுவார் என்றும் இருவேறு தகவல் பரவி வருகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம் கவின் நாளை கமலை சந்திக்கிறாரா என்று!
-
தாக்கப்பட்ட பிக்பாஸ் பூர்ணிமா.. குவிந்த ட்ரோல் கமெண்ட்ஸ்.. உடனடியாக நீக்கப்பட்ட வீடியோ
-
போஸ்டர் அடி.. தமிழ்நாட்டுக்கே இன்வைட் ரெடி.. 4ஆவது திருமணத்தை இப்படிதான் செய்வேன்.. வனிதா ஓபன் டாக்
-
Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா