Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
புதுயுகம் டிவியில் கேள்வி பாதி கிண்டல் பாதி
'புதுயுகம் தொலைக்காட்சி'யில் "கேள்வி பாதி கிண்டல் பாதி'" நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 09.30 மணிக்கும், அதன் மறு ஒளிபரப்பு மறுதினம் 04.00 மணிக்கும் ஒளிபரப்பாகி வருகிறது.
கேலிகளுக்கும், கிண்டல்களுக்கும் பஞ்சமில்லாத வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அதன் தொகுப்பாளர்களான முத்துவும், ரஞ்சனியும், கிண்டலோடு உரையாடுகின்றனர்.
திரையுலக நட்சத்திரங்கள் மட்டுமல்லாது அல்லாமல் மற்ற எல்லா துறை சார்ந்த பிரபலங்களையும் நிகழ்ச்சியில் வரவழைத்து அவர்களுடன் உற்சாகமாக உரையாடுகிறார்கள்.
பிரபலங்களில் பர்சனல்
வெறும் நேர்காணலாக மட்டும் இல்லாமல், அவர்களுடைய பர்சனல் வாழ்க்கையில் நகைச்சுவையாக நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள், மற்றும் அவர்கள் தங்களின் வாழ்க்கையில் கடந்து வந்த இன்னல்கள் போன்ற விசயங்களை சந்தோசமாகவும் வெளிப்படையாகவும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
கிண்டலும் கேலியும்
யாருடைய மனதையும் புண்படுத்தாதவாறு கிண்டல்களுக்கும், கேலிகளும் நிறைந்துள்ள இந்த நிகழ்ச்சிக்கு தொலைகாட்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.
சுவாரஸ்ய விளையாட்டுக்கள்
இந்த அரை மணி நேர நிகழ்ச்சியில் பல சொல் விளையாட்டுகளும், கோமாளித்தனமான விளையாட்டுக்களை சுவாரஸ்யத்துடன் விளையாட வைப்பதும் இதன் சிறப்பம்சம்.
ரசிக்கும் பிரபலங்கள்
தமிழ் தெரியாத நடிகர், நடிகைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுத்து அவர்களை கலாப்பதும், நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் அதனை ரொம்பவே ரசித்து செய்வதும் இந்த நிகழ்ச்சியின் கூடுதல் பலமாகவே அமைந்துள்ளது.
பிரபலங்களின் குறும்புகள்
அதுமட்டும் அல்லாமல், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் தாங்களாகவே முன் வந்து தங்கள் வாழ்க்கையில் அவர்கள் மொக்கை வாங்கிய விஷயங்களையும், சிறு வயதில் செய்த சின்ன சின்ன குறும்புத்தனங்களையும் வெளிப்படையாக பகிர்ந்து கொள்வது, வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில்
சுவாரஸ்ய அரங்கம்
அரை மணி நேரம் எப்படி கழிந்தது என்று தெரியாத வகையில் சுவாரஸ்யமாக இந்த நிகழ்ச்சி வடிவமைத்து வழங்கப்பட்டு வருகிறது. ‘கேள்வி பாதி கிண்டல் பாதி' நிகழ்ச்சி. அரங்க அமைப்பில் இருந்து அமரும் நாற்காலி வரை சுவாரஸ்யமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.