மக்கள் டிவியில் மன நோய் பிரச்சினை தீர்க்கும் நிகழ்ச்சி

ஏராளமான மனநோய்களால் ஆட்கொள்ளப்படுகின்றனர். அலுவலகத்தில் பிரச்னை, வீட்டில் சண்டை, சச்சரவு, நண்பர்களுடன் இயல்பாக பேச இயலாமை என எதுவாக இருந்தாலும், பெண்களுக்கு உற்ற தோழியாய் இருந்து, தகுந்த ஆலோசனைகளை உரிய உளவியல் வல்லுனர் மூலமாக கொட்டித் தீர்த்துவிடு தோழி என்று நிகழ்ச்சியின் வாயிலாக தருகிறது, மக்கள் தொலைக்காட்சி.
மனிதர்களில் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பிரச்னைகளில் சிக்கிக் கொள்வது இயல்பு தான். என்றாலும் அவைகளிலிருந்து எத்தனை பேர் வெளியே வந்துள்ளனர் என்றால் மூன்றில் ஒரு பங்கு கூட இருக்காது எனலாம்.
காரணம், எதையும் பகிர்ந்து கொள்ள இயலாத நிலை, கருத்துகளையும் ஆலோசனைகளையும் அறிய முடியாத நிலை என சூழ்நிலைக் கைதியாக அடைப்பட்டுக் கிடக்கின்றான் மனிதன்.
இவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காகவே மக்கள் தொலைக்காட்சி வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு கொட்டித்தீர்த்துவிடு தோழி நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக பெண்களுக்குரிய பிரச்னைகள் குறித்து மருத்துவர் ஷாலினி ஆலோசனைகளை வழங்குகிறார். தொகுப்பாளினி ப்ரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.


Click it and Unblock the Notifications











