மீரா ஒரு புதுக்கவிதை... மார்ச் 28லிருந்து ஒளிபரப்பாக இருக்கு குஷ்பூவோட புது சீரியல்!

சென்னை : நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவில் சிறப்பான நடிகையாக இருந்தவர். தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு தயாரிப்பு மற்றும் சின்னத்திரை சீரியல்கள் என்று மிகவும் பிசியாக தன்னை வைத்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து பல சீரியல்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.

நடிகை குஷ்பூ

நடிகை குஷ்பூ

நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அடையாளமாக உள்ளார். இவரது காலகட்டத்தில் இவர் ஜோடி சேராத முன்னணி நடிகர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு ரஜினி, கமல், சத்யராஜ் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவருக்கு கோயில் கட்டிய சம்பவத்தையும் தமிழ் ரசிகர்கள் நடத்திக் காட்டினர்.

பேமசான குஷ்பூ இட்லி

பேமசான குஷ்பூ இட்லி

இதேபோல இவரது பெயரில் குஷ்பூ இட்லியும் மிகவும் பேமஸ். தொடர்ந்து பல சூப்பர் ஹீரோக்களுடன் சூப்பர்ஹிட் படங்களில் நடித்த இவர், ஒரு கட்டத்தில் இயக்குநர் சுந்தர் சியை காதல் திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

எப்பவுமே குஷ்பூ பிசி

எப்பவுமே குஷ்பூ பிசி

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் தன்னை மிகவும் பிசியாக வைத்துக் கொண்டுள்ளார் குஷ்பூ. அவ்னி கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தன்னுடைய கணவருடன் இணைந்து நடத்தி வருகிறார். பல வெற்றிப் படங்களையும் சீரியல்களையும் இந்த நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

புதிய தொடர் மீரா

புதிய தொடர் மீரா

தொடர்ந்து சின்னத்திரையில் பல சீரியல்களை கொடுத்து வந்த இவர், தற்போது ரியாலிட்டி ஷோக்களிலும் காணப்படுகிறார். கடைசியாக சன் டிவியில் இவரது நடிப்பில் லஷ்மி ஸ்டோர்ஸ் தொடர் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து சில காலங்கள் தொடர்களை கொடுக்காமல் இருந்த குஷ்பூ தற்போது கலர்ஸ் டிவிக்காக மீரா என்ற புதிய தொடரில் நடித்து வருகிறார். இதன் கதாசிரியராகவும் செயல்பட்டு வருகிறார்.

மார்ச் 28 முதல் ஒளிபரப்பு

மார்ச் 28 முதல் ஒளிபரப்பு

இந்நிலையில் வரும் 28ம் தேதி முதல் இந்த தொடர் கலர்ஸ் தமிழ் சேனலில் இரவு 9.30 மணிக்கு தினந்தோறும் ஒளிபரப்பாக உள்ளது. மீரா ஒரு புதுக் கவிதை என்று கூறும் புதிய போஸ்டர்களை தற்போது இந்த தொடரின் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த தொடரில் நடிகர் சுரேஷ் மேனன் நாயகனாக நடித்து வருகிறார்.

புதிய போஸ்டர்கள்

புதிய போஸ்டர்கள்

இந்த தொடரில் இருவரும் பிரிந்து வாழ்வதாக தெரிகிறது. குஷ்பூ இடம்பெற்றுள்ள ஒரு போஸ்டரில், என் உணர்வை மதித்து, உன் மனதில் என்னை விதைத்திருந்தால் இடியோ மழையோ உன்டு நான் இருந்திருப்பேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உறவுகள் தொலைந்தாலும் உணர்வுகள் மறையாது என்றும் கூறப்பட்டுள்ளது.

சிறப்பான ப்ரமோ

சிறப்பான ப்ரமோ

இதேபோல சுரேஷ்மேனன் இடம்பெற்றுள்ள போஸ்டரில் தெரியாமல் செய்த தவறால் தெரிந்தே என் துணையை பிரிந்து நிற்கின்றேன் என்று வாசகம் இடம்பெற்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த தொடரில் ப்ரமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்த போஸ்டர்கள் தற்போது கவனம் ஈர்த்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X