Don't Miss!
- News போலி பத்திரம்.. ஆன்லைனிலேயே பத்திர மோசடியை கண்டுபிடிக்கலாமா? இதை கவனியுங்க.. தமிழக அரசு சபாஷ்
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மிரட்டும் முன்ஜென்மம்... சூர்யபுத்திரி சீரியலில் திருப்பம்
சூர்ய புத்திரி தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த தொடரில் கிருஷ்ணாவாக நடிக்கும் லாவண்யாவுக்கு எதனால் ராம் (நிழல்கள் ரவி) குடும்பத்தினரின் மீது பகை என்பதையும், கிருஷ்ணா தான் சூர்யபுத்திரி என்பதையும், இனி ஒளிபரப்ப உள்ளனர்.
பல ஜென்மங்களுக்கு முன் சூர்யபுத்திரி எப்படியெல்லாம் ராம் குடும்பத்தினரால் பாதிக்கப்பட்டாள் என்பதையும், பிரமாண்டமான முறையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்களாம்.
முன்ஜென்ம கதையை கையில் எடுத்திருப்பதால் அதுதொடர்பான பல காட்சிகள் சின்னத்திரை ரசிகர்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும் என்கிறார், சூர்ய புத்திரி தொடரின் தயாரிப்பாளர் குட்டிபத்மினி.
இந்த தொடரில் நிழல்கள் ரவி, ஏ.ஆர்.எஸ், குட்டிபத்மினி, லாவண்யா, ஸபர்ணா, ராஜா, ராஜ்குமார், ஆர்யா, நேபால், குமரேசன், ஸ்ரீதேவி, ஸ்ரீவித்யா, நேஹா, ஸ்வேதா, தீபா, சுஜாதா, டிவி.ராமானுஜம் ஆகியோர் நடித்துள்ளனர். வைஷ்ணவி மீடியா ஒர்க்ஸ் லிமிடெட் சார்பில் தயாரித்துள்ளார் குட்டிபத்மினி, தமிழ் பாரதி இயக்கியுள்ளார்.