Don't Miss!
- Sports போதும் டா! சாமி.. ரவீந்திராவை நம்பி ஏமாந்த சிஎஸ்கே.. கெத்தாக தொடங்கி சொத்தையாக மாறிய கதை
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமை.. அதிர வைத்த வனிதா!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள் குறித்து வனிதா விஜயக்குமார் வாய் திறந்துள்ளார்.
பல மொழிகளில் ஹிட் அடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் சீசன் 3யை எட்டியுள்ளது. கடந்த இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் இந்த மூன்றாவது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகை வனிதா விஜயகுமார் எலிமினேட் செய்யப்பட்டார். அவர் வெளியேற்றப்பட்டதால் நிகழ்ச்சியின் சுவாரசியம் குறைந்துவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பேட்டி கொடுக்கும் வனிதா
இதைத்தொடர்ந்து தான் வெளியேற்றப்பட்டதை தன்னால் நம்பவே முடியவில்லை என்றும் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளையும் தொலைக்காட்சிகளுக்கு பேட்டிக் கொடுத்து பகிர்ந்து வருகிறார்.
பிக்பாஸ் வீட்டில் கொடுமைகள்
இதுவரை நடந்து முடிந்த 2 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் சொல்லாத பல விஷயங்களை வனிதா கூறி வருகிறார். அதன்படி பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பல கொடுமையான விஷயங்களையும் கூறியுள்ளார் வனிதா.
சில நிமிடங்கள் மட்டுமே
அதாவது பிக்பாஸ் வீட்டில் விடிய விடிய லைட்டுகள் எரிந்து கொண்டே இருக்குமாம். சும்மா கேமராவுக்காக ஒரு சில நிமிடங்கள் தான் லைட்ஸை நிறுத்துவார்களாம்.
வெளிச்சத்திலேயேதான்
பின்னர் அடுத்த சில நிமிடங்களிலேயே மீண்டும் லைட்ஸ் ஆன் செய்யப்பட்டு விடுமாம். இரவு முழுக்க லைட்டுகள் எரிந்து கொண்டே இருக்குமாம் அந்த வெளிச்சத்திலேயேதான் போட்டியாளர்கள் தூங்க வேண்டுமாம்.
பகலில் துப்பாக்கிச்சூடு
ஆக இரவில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு பிக்பாஸ் வீட்டில் லைட்டுகள் ஆஃப் செய்யப்படுவது போன்று காட்டுவது பொய் என தெரியவந்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் பகலில் தூங்கினால் துப்பாக்கியால் சுட்டு எழுப்பிவிட்டு விடுகிறார்கள்.
கொஞ்சம் பாத்து பண்ணுங்க
பகலிலும் தூக்கம் இல்லாமல் இரவிலும் தூக்கம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள் போட்டியாளர்கள். என்னதான் சகல வசதிகளும இருந்தாலும் இரவில் நிம்மதியான தூக்கம் இல்லாவிட்டால் எப்படி பிக்பாஸ்.. கொஞ்சம் பாத்து பண்ணுங்க!