பத்து வருடங்களுக்குப் பிறகு வந்த அப்பா.. கதறி அழுத லாஸ்லியா! கலங்க வைத்த பிக்பாஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்கு வந்த தனது அப்பாவை பார்த்து லாஸ்லியா கதறி அழுதது பார்வையாளர்களையும் கலங்க செய்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக ஃபிரீஸ் டாஸ்க்கை தொடங்கியிருக்கிறார் பிக்பாஸ். மேலும் 80 நாட்களாக குடும்பத்தை பிரிந்துள்ள போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் வகையில் அவர்களின் குடும்பத்தினரும் அழைத்து வரப்படுகின்றனர்.
முதல் நாளான நேற்று முகெனின் குடும்பத்தினர் வந்தனர். இதனை கொண்டாடினர் ஹவுஸ்மேட்ஸ்கள். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரமோவில் சீக்ரெட் ரூமில் இருந்த சேரன் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்தார்.

கொஞ்சிய சேரன்
அவரை கண்டதும் லாஸ்லியா, ஷெரின், வனிதா, தர்ஷன் உள்ளிட்டோர் மகிழ்ச்சியடைந்தனர். லாஸ்லியாவை என் சக்கரை கட்டி என்று கொஞ்சினார் சேரன்.

ஒரிஜினல் அப்பா
இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் லாஸ்லியாவின் ஒரிஜினல் அப்பா பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியாவது தெரியவந்துள்ளது.

கதறி அழுத லாஸ்லியா
ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடல் ஒலிக்க வீட்டின் மெயின் டோர் வழியாக என்ட்ரி கொடுக்கிறார் லாஸ்லியாவின் அப்பா. பத்து வருடங்களுக்குப் பிறகு அவரை பார்க்கும் லாஸ்லியா கட்டியணைத்து கதறி அழுகிறார்.

கலங்கிய பார்வையாளர்கள்
அவர் கதறி அழுவதை பார்க்கும் சேரன் உட்பட மற்ற ஹவுஸ்மேட்ஸ்களும் கலங்குகின்றனர். லாஸ்லியா கதறி அழுவதை பார்வையாளர்களையும் கலங்க செய்தது.

பெரிய இன்ப அதிர்ச்சி
தங்களுக்காக தனது தந்தை பத்தாண்டுகளாக குளிர் பிரதேசத்தில் வேலை பார்த்து வருவதாக கூறி அழுதார் லாஸ்லியா. இந்நிலையில் அவரை கூட்டி வந்து பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு பெரிய இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











