நீ பண்ணின காரியத்தை பார்த்து கட்டிப்பிடிச்சு முத்தம் குடுப்பாங்களா? லாஸ்லியாவை விளாசும் நெட்டிசன்ஸ்
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் தனக்கு மிகவும் கஷ்டமாக நேர்ந்த தருணம் எது என கூறிய லாஸ்லியாவை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் இன்று பழைய போட்டியாளர்களும் பங்கேற்று ஹவுஸ்மேட்ஸ்களுடன் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ரேஷ்மா முகென் குறித்து பேசியது ஹவுஸ்மேட்ஸ்களை நெகிழச் செய்தது.
அதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. ஹவுஸ்மேட்ஸ் பேசும் அறையில் அவர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தபோது எடுக்கப்பட்ட போட்டோக்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நெருக்கமாகக்கூடாது
இதில் லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். அப்போது பேசும் லாஸ்லியா, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் போது, யாருடனும் அவ்வளவு நெருக்கமாக இருக்கக்கூடாது, எதற்காகவும் அழக்கூடாது என்ற முடிவோடு வந்தேன்.

சொல்ல முடியாது
நானும் அப்பாவும் இந்த வீட்ல மீட் பண்ணும்போது எனக்கு தெரியும் நான் நொறுங்கிடுவேன்னு. அப்பாவ நான் இந்த வீட்ல பார்த்த ஸ்ட்வேஷன், அதை சொல்ல முடியாது. அப்பா வந்து என்னை கட்டிப்பிடிப்பாருன்னு நினைச்சேன்.

என்ன செய்யுற?
ஆனா அப்பா வந்து, நீ என்ன பண்ணிகிட்டு இருக்கன்னு கேட்டாரு அந்த விஷயம் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது என்று கூறுகிறார் லாஸ்லியா. லாஸ்லியாவின் அப்பா பிக்பாஸ் வீட்டிற்கு வந்தபோது, கவினை காதலித்த லாஸ்லியாவை கண்டித்தார். 10 வருடங்களுக்குப் பிறகு பார்த்த தனது மகளை திரும்பிகூட அவர் பார்க்கவில்லை.
வெளுத்திருப்பார்
இந்நிலையில் இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள், பின்னே நீ பண்ணின காரியத்தை பார்த்து கட்டிப்பிடிச்சு முத்தம் குடுப்பாங்களா ? அவரு ஒரு மரியாதைக்காக கோவப்பட்டதோட நிறுத்திட்டார் இதுவே உன்னோட வீடா இருந்தா அடி வெளுத்திருப்பர் என்று தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











