twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மேதாவி போல் கேள்வி கேட்ட கவின்.. வாய் கூசாமல் அண்ட புளுகு புளுகிய லாஸ்லியா!

    |

    Recommended Video

    Bigg Boss 3 Tamil:Kavliya Haters| திட்டி தீர்க்கும் மக்கள்

    சென்னை: நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே லாஸ்லியா அண்ட புளுகு புளுகியது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய செய்தது.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஹவுஸ்மேட்ஸ்களில் இருந்து ஒருவர் வெளியேற்றப்படுவது வழக்கம். அதனால் ஞாயிற்றுக்கிழமை என்றாலே எதிர்பார்ப்பும் ரசிகர் கூட்டமும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகமாகிவிடும்.

    அந்த வகையில் நேற்றைய எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்தது. ஆனால் நேற்றைய எபிசோடே கன்ஃபெஷன் ரூமில் இருந்துதான் ஆரம்பிரத்தது.

    கண்ணீரும் கம்பலையும்

    கண்ணீரும் கம்பலையும்

    கன்ஃபெஷன் ரூமினில் கண்ணீரும் கம்பலையுமாக இருந்தார் லாஸ்லியா. அவரிடம் பேச்சுக்கொடுத்த பிக்பாஸ், ஏற்கனவே லாஸ்லியா கேமரா முன்பிடம் பேசியது குறித்து கேட்டார்.

    அழுத லாஸ்லியா

    அழுத லாஸ்லியா

    அதற்கு லாஸ்லியா, என்னால் இனி இங்கு இருக்க முடியாது பிக்பாஸ். என்னை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விடுங்கள் என்று கூறி அழுதார்.

    என்னால் ஏற்க முடியவில்லை

    என்னால் ஏற்க முடியவில்லை

    மேலும் யாருடைய விளையாட்டையும் குழப்புவதற்கு தான் இங்கு வரவில்லை என்றும், தனக்கு தன்னுடைய வீட்டிற்கு போக வேண்டும் என்றும் கூறினார் லாஸ்லியா. மேலும் இங்கு நடந்த விஷயங்களை என்னால் ஏற்க முடியவில்லை என்றும் கூறி கண்ணீர் விட்டார்.

    சிரிங்க லாஸ்லியா

    சிரிங்க லாஸ்லியா

    அவரை சமாதானப்படுத்திய பிக்பாஸ், நீங்கள் நினைத்த நேரத்தில் எல்லாம் வெளியே போக முடியாது என்றார். மேலும் எல்லாவற்றையும் அனுசரித்துதான் செல்ல வேண்டும் என்ற பிக்பாஸ் லாஸ்லியாவை சிரிக்க சொல்லி அழகுப்பார்த்தார்.

    மேதாவிதனமான கேள்வி

    மேதாவிதனமான கேள்வி

    பின்னர் கன்ஃபெஷன் ரூமில் இருந்து வெளியேறிய லாஸ்லியாவிடம் கவின், பெரிய மேதாவியை போல் என்ன வீட்டுக்கு போக கேப் புக் பண்ணி தர்றேன்னு சொன்னாங்களா என்று கேட்டார்.

    கூசாமல் பொய்

    கூசாமல் பொய்

    அதற்கு நான் வீட்டுக்கு போவதாக சொல்லவே இல்லையே என்று அண்ட புளுகு புளுகினார். மேலும் நான் இந்த வீட்டில் நடக்கும் விஷயங்களை பற்றிதான் பேசினேன் என்றும் வாய் கூசாமல் பொய் சொன்னார்.

    காதலனிடமே பொய்

    காதலனிடமே பொய்

    லாஸ்லியா கன்ஃபெஷன் ரூமில் ஒன்று பேசிவிட்டு கவினிடம் ஒன்று பேசினார். லாஸ்லியா காதலனிடமே பச்சையாக பொய் பேசியது பார்வையாளர்களை அதிர்ச்சியடைய செய்தது. ஏற்கனவே தனக்கு பிறந்த நாளில் கேக்கே வெட்டியதில்லை என பொய் சொன்னார் லாஸ்லியா என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Losliya told lie to Kavin after coming from confession room in Biggboss house. Losliya spoke different things to Kavin and Biggboss.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X