Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இது ரொம்ப தவறு.. சரியான விளக்கத்த கொடுக்கனும்.. விஜய் டிவிக்கு மதுமிதாவின் கணவர் கிடுக்கிப்பிடி!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் ஃபைனலில் பங்கேற்காத போது தன்னுடைய காட்சியை பயன்படுத்திய விஜய் டிவி அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் மதுமிதாவின் கணவர் மோசஸ் வலியுறுத்தியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பான நாள் முதல் சர்ச்சையாக இருந்தது.
தற்போது நிகழ்ச்சி முடிந்த பிறகும சர்ச்சை தொடர்ந்து வருகிறது. அதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கெற்ற மதுமிதாசக போட்டியாளர்கள் கொடுத்த டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்று நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார்.
பிக்பாஸ் முடிஞ்சுடுச்சு.. அந்த மூனு பேரும் செஞ்ச வேலையை பாருங்க.. வைரலாகும் வீடியோ!
மதுமிதா
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, மதுமிதா மீதே புகார் அளித்தது விஜய் டிவி நிர்வாகம். தன் மீதான புகாரை பொய் என்று கூறிய மிதுமிதா விஜய் டிவி மீதும் கமல்ஹாசன் மீதும் புகார் அளித்தார்.
அழைப்பில்லை
இதனால் விஜய் டிவிக்கும் மதுமிதாவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்தது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிக்பாஸ் பினாலேவின் போதும் மதுமிதாவுக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை.
விமர்சனம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் பினாலே நிகழ்ச்சியில் மதுமிதாவின் கணவர் மோசஸ் பங்கேற்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக தொலைக்காட்சி சேனல் மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
பங்ககேற்கல
இந்நிலையில் இதுதொடர்பாக மதுமிதாவின் கணவர் மோசஸ், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிக்பாஸ் ஃபைனலில் தானோ மதுமிதாவோ அல்லது தங்களின் குடும்பத்தை சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை. ஏனென்றால் எங்களை அவர்கள் இன்வைட் பண்ணல.
|
விளக்கம் கொடுக்க வேண்டும்
ஆனால் சமீபமா ஒரு செய்தி பரவி வருகிறது. நானும் பார்த்தேன், அதில் நான் பங்கேற்றதாக போடப்பட்டுள்ளது. இதனால் பலரும் நான் பங்கேற்றதாக நினைத்து பேசுகிறார்கள். அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை. இது பெரிய தவறு. இதுகுறித்து அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு மோசஸ் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.