twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மொத்தமா கூட்டு சேர்ந்து கும்மியடித்த ஹவுஸ் மேட்ஸ்.. அப்படி என்னதான் சொன்னாங்க இந்த மதுமிதா?

    |

    சென்னை: மதுமிதா கூறிய அந்த ஒற்றை வார்த்தையால் ஒட்டு மொத்த பிக்பாஸ் குடும்பமும் ஒன்று சேர்ந்து அவரை கும்மியடித்துள்ளது.

    பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த 2 சீசன்களை விடவும் கொஞ்சம் கூடுதல் சுவாரசியத்துடன் செல்கிறது. நிகழ்ச்சி தொடங்கிய ஒரு வாரத்திலேயே ஹவுஸ் மேட்ஸின் நவரசம் வெளியாகிவிட்டது.

    சண்டை, அழுகை, ஆட்டம் பாட்டம் என களைகட்டி வருகிறது பிக்பாஸ் வீடு. இதில் வனிதா, சாக்ஷி, ஷெரின், அபிராமி, ரேஷ்மா, ஆகியோர் கடந்த வாரமே புரணி பேச தொடங்கிவிட்டனர்.

    எனக்கும் முகெனுக்கும் பிறந்த குழந்தை.. பரபரக்க வைத்த அபிராமி.. சிக்கிக்கொண்ட மதுமிதா! எனக்கும் முகெனுக்கும் பிறந்த குழந்தை.. பரபரக்க வைத்த அபிராமி.. சிக்கிக்கொண்ட மதுமிதா!

    இழுத்துவிட்ட அபிராமி

    இழுத்துவிட்ட அபிராமி

    வனிதா குரூப் கிரியேட் செய்துகொண்டு அதிகாரம் செலுத்தி வருகிறார். அபிராமி ஓவர் ஆக்ட் செய்து வருகிறார். ஷெரின் ரவுடி போல் பேசி வருகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதலே அபிராமி, காதல், குழந்தை என கவினையும் முகெனையும் இழுத்து விட்டுள்ளார்.

    எனக்கு பிடிக்கவில்லை

    எனக்கு பிடிக்கவில்லை

    இதுதொடர்பான பிரச்சனையில் தான் ஒரு தமிழ் பெண் தனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை என்று கூறினார் மதுமிதா. அபிராமியின் பெயர் டேமெஜ் ஆகிவிடக்கூடாது என்ற நோக்கத்தில் பேசிய மதுமிதா, இந்த வார்த்தையைவிட்டுவிட்டார்.

    மல்லுக்கட்டிய குடும்பம்

    மல்லுக்கட்டிய குடும்பம்

    இதுதான் சாக்கு என்று ஒட்டு மொத்த குடும்பமும் அவரை பாடாய் படுத்திவிட்டது. நீ எப்படி அப்படி பேசலாம் என ஷெரின், அபிராமி, சாக்ஷி, வனிதா ஆகியோர் ஒரு புறம் கத்த மறுபுறம் சாண்டி, கவின் என மதுமிதாவிடம் மல்லுக்கட்டினர்.

    மதுமிதாவின் நல்ல எண்ணம்

    மதுமிதாவின் நல்ல எண்ணம்

    இத்தனைக்கும் அபிராமியும் தமிழ்பெண்தானே எப்படி இப்படி நடந்துகொள்கிறார்? என்றும் கூறினார் மதுமிதா. இந்த நிகழ்ச்சியை வீட்டில் உள்ள குழந்தைகளும் தானே பார்க்கின்றனர் என்ற நல்ல எண்ணத்தில் தான் மதுமிதா கூறியது புரிந்தது.

    நீ பெரிதாக்குகிறாய்

    நீ பெரிதாக்குகிறாய்

    ஆனால் மற்ற ஹவுஸ் மேட்ஸ்களுக்கு அந்த விஷயம் அவ்வளவு பெரியதாக தெரியவில்லை. அபிராமி விளையாட்டுக்காகதான் செய்தார், அதனை நீ பெரிதாக்குகிறாய் என்று கூறி சண்டையிட்டனர்.

    பிய்த்துக்கொண்டு போன அபி

    பிய்த்துக்கொண்டு போன அபி

    இதனால் துயரத்தில் ஆழ்ந்தார் மதுமிதா. மேலும் பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களும் அவரை தனிமைப்படுத்தி கார்னர் செய்துள்ளனர். மதுமிதாவுடன் பெட்டை ஷேர் செய்து வந்த அபிராமி, இனி மதுமிதாவுடன் ஷேர் செய்யப்போவதில்லை என பிய்த்துக்கொண்டு போய்விட்டார்.

    English summary
    Madhumitha said I am a Tamil girl in the issue with Abirami. House mates fighting with Madhumitha for saying Tamil girl.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X