Don't Miss!
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள இரண்டு விருந்தாளிகள்... யாருன்னு பாருங்க மக்களே!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று இரண்டு விருந்தாளிகள் வந்திருப்பது புரமோவில் தெரியவந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இதனால் போட்டியை கடுமையாக்கியுள்ள பிக்பாஸ் அவ்வப்போது ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பனீஷ்மென்ட்டும் கொடுத்து வருகிறார். நேற்று நாமினேஷனே இல்லாமல் அனைவரையும் பச்சை மிளகாய் சாப்பிட வைத்தார் பிக்பாஸ்.
யாஷிகா அன்ட் மகத்
இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு கடந்த சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களை விருந்தினர்களாக அழைத்து வர முடிவு செய்திருக்கிறார் பிக்பாஸ். அதன்படி கடந்த பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்ற மகத் மற்றும் யாஷிகா ஆனந்த் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளது இன்று வெளியான முதல் புரமோவில் தெரியவந்துள்ளது.
ஒரு வாரம்
அவர்களை அணைத்து ஹவுஸ்மேட்ஸ்களும் ஆரத்தழுவி வரவேற்றனர். அப்போது சாண்டியிடம் பேசும் மகத், ஒரு வாரம் தங்கப்போகிறோம் என்று கூறுகிறார். இதனை கேட்ட சாண்டி, சீனு சீனு.. பிக்பாஸ் வீட்டிற்கு உங்களை மீண்டும் வரவேற்கிறோம் என்கிறார்.
வீடு செம
வீட்டை சுற்றும் முற்றும் பார்த்த யாஷிகா ஆனந்த் உங்க வீடு செமயா பண்ணிருக்காங்கய்யா என்கிறார். தொடர்ந்து லிவிங் ஏரியாவில் அமர்ந்து ஹவுஸ்மேட்ஸ்களிடம் பேசுகின்றனர் மகத்தும் யாஷிகாவும்.
ஆல் த பெஸ்ட்
அப்போது டாஸ்கையெல்லாம் நல்லா பண்ணுங்க, ஆல் த பெஸ்ட் என்கிறார் மகத். அவரை தொடர்ந்து பேசும் யாஷிகா, இந்த வீடு எல்லாவற்றையும் சாதகமாக்கியிருக்கிறது என்று கூறுகிறார். இவ்வாறு முடிகிறது முதல் புரமோ.
மகத்துக்கு ரெட் கார்டு
கடந்த சீசனில் பங்கேற்ற மகத்தும் யாஷிகாவும் பிக்பாஸ் வீட்டில் காதலிக்க தொடங்கினர். மும்தாஜிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதால் மகத் ரெட்கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.