Don't Miss!
- News டார்க்கெட் திமுக.. தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மீண்டும் பிராச்சியுடன் சேர்ந்த மகத்: அப்போ யாஷிகா?
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு மீண்டும் தனது காதலி பிராச்சியிடமே சென்றுவிட்டார் மகத்.
துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சியை காதலித்த மகத் பிக் பாஸ் 2 வீட்டில் இருந்தபோது யாஷிகா மீது காதலில் விழுந்தார். அவர் யாஷிகா மீதான காதலை ஒப்புக் கொண்டதை பார்த்த பிராச்சி காதலை முறித்துக் கொண்டார்.
இந்நிலையில் இது குறித்து மகத் கூறியிருப்பாவது,
பிக் பாஸ் 2
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நான் அப்படி கோபப்பட்டிருக்கக் கூடாது. அடுத்தவர்கள் பேச்சை கேட்டு நடந்து கொண்டேன். நான் அப்படி அடுத்தவர்களின் பேச்சை கேட்டிருக்கக் கூடாது. வெளியே வந்து நிகழ்ச்சியை பார்த்தபோது தான் நான் அந்த அளவுக்கு கோபப்பட்டிருக்கக் கூடாது என்று தோன்றியது. கோபம் வருவது நியாயம் தான். ஆனால் நான் ஓவராக கோபப்பட்டிருக்கிறேன்.
மும்தாஜ்
நான் மும்தாஜிடம் நடந்து கொண்ட விதம் எனக்கே பிடிக்கவில்லை. அவர் எனக்கு அக்கா போன்றவர். அவரிடம் மோசமாக நடந்து கொண்டதற்காக வருத்தப்படுகிறேன். அவர் வெளியே வந்த பிறகு நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்பேன். யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர் சொன்னதை கேட்டு தான் நான் அப்படி நடந்து கொண்டேன். (இப்பொழுதாவது புரிகிறதே உங்களுக்கு, நல்லது)
ஐஸ்வர்யா
யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோரை பிற போட்டியாளர்களுக்கு பிடிக்காது என்று தெரிந்தும் நான் அவர்களை விட்டு பிரியவில்லை. நான் அவர்களுக்கு எதிராக திரும்பியிருந்தால் அது போலியானதாக இருக்கும். அவர்கள் இருவரும் என்னை பயன்படுத்திக் கொண்டனர் என்று மக்கள் நினைக்கிறார்கள். நான் கோபத்தை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.
பிராச்சி
நான் பிராச்சியை காதலிக்கிறேன். அவர் தான் என் வாழ்க்கை. ஒரு வீட்டில் 70 நாட்கள் ஒருவருடன் இருந்தால் நிச்சயம் ஈர்ப்பு ஏற்படத் தான் செய்யும். யாஷிகா மீது ஈர்ப்பு ஏற்பட்டது உண்மையே. அதற்காக அவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பேன் என்று நான் சொல்லவே இல்லை. நான் நேர்மையாக இருந்து மனதில் பட்டதை கூறியதால் மக்களுக்கு நான் கெட்டவனாகிவிட்டேன்.
வாழ்க்கை
யாஷிகா இனிமையானவர். ஆனால் பிராச்சி தான் என் காதலி. பிராச்சி என்னுடனான காதலை முறித்துக் கொண்டது குறித்து வெளியே வந்ததும் தெரிந்து கொண்டேன். அவரும் அது குறித்து என்னிடம் தெரிவித்தார். அவர் விரக்தியில் இருந்தார். அவரிடம் விளக்கிக் கூற நான் அவர் அருகில் இல்லை. வெளியே வந்த பிறகு அவரிடம் பேசி பிரச்சனையை தீர்த்துவிட்டேன். பிராச்சி என் வாழ்க்கையில் இருப்பதால் நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். நான் பிராச்சியை விட்டு விலகியதே இல்லை. எப்பொழுதுமே அவரை தான் காதலிக்கிறேன் என்கிறார் மகத்.