Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- News மயிலாடுதுறையில் ஆச்சரியம்.. அந்த "வைக்கோல் மூட்டை".. ஆஹா, வைத்தீஸ்வரன் கோயில் தையல் நாயகி.. பரவசம்
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கருணாநிதி குடும்பத்தால் பல கோடி குடும்பங்கள் வாழ்ந்துள்ளது: மகத் உருக்கம்
Recommended Video
சென்னை: கருணாநிதியின் குடும்பத்தால் பல கோடி குடும்பங்கள் வாழ்ந்துள்ளது என்று மகத் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் 2 வீட்டில் கருணாநிதியின் புகைப்படத்திற்கு மாலை போட்டு வைத்திருந்தனர். புகைப்படத்திற்கு முன்பு போட்டியாளர்கள் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய மகத் கூறியதாவது
கலைஞர் தாத்தா
தமிழ் கடவுளுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் வணக்கம். தாத்தா, கலைஞர் தாத்தா, டாக்டர், தலைவர், கலைஞர் கருணாநிதி. அவரை நான் என்றுமே தாத்தா என்று தான் நினைத்திருக்கிறேன். என் நண்பர் தயாநிதி அழகிரி என்பது அனைவருக்கும் தெரியும். அவன் தாத்தாவை பற்றி நிறைய கதைகள் சொல்லியிருக்கிறான். தாத்தாவை பற்றி நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறான்.
சினிமா
தாத்தா 14 வயதிலேயே அரசியலுக்கு வந்து, கலையுலகிற்கு வந்தவர். சினிமாவையும், அரசியலையும் சப்போர்ட் செய்து, தமிழுக்காக போராடியவர். பள்ளிக்கே செல்லாத ஒரு மேதாவி. இன்று அவரை போன்று எழுத ஆளில்லை. நான்கு தலைமுறையை பார்த்திருக்கிறார், அதைவிட பெரிய சாதனை இருக்காது. அவரை போன்ற ஒரு தலைவர் இனி தமிழ்நாட்டில் திருப்பி இருப்பாரா இல்லையா என்று தெரியாது. ஆனால் இவர் வரலாறு படைத்துவிட்டு சென்றுள்ளார்.
தமிழ்நாடு
இந்த தலைமுறையில் நாமும் இருக்கிறோம் என்பதில் ரொம்ப பெருமைப்படுகிறேன். அந்த குடும்பத்துடன் தொடர்பில் இருந்திருக்கிறேன் என்பதற்கு நான் கொடுத்து வைத்தவன் என்றே சொல்ல வேண்டும். ரொம்ப சந்தோஷமாக இருக்கு. அவர் இறந்தது ரொம்ப கஷ்டமான விஷயமாக இருக்கிறது. அந்த குடும்பத்தால் தமிழ்நாட்டில் பல கோடி குடும்பங்கள் வாழ்ந்திருக்கு என்று மகத் உருக்கமாக தெரிவித்தார்.
பாலாஜி
இன்று தமிழ் நம்முடன் இல்லை. தமிழ் என்று சொன்னாலே நமக்கு அவர் நினைவு தான் வரும். அவர் இருந்த கால கட்டத்தில் நாமும் இருந்திருக்கிறோம் என்பதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அவர் நிறைய உழைத்துவிட்டார். அதனால் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று இறைவனுக்கு தெரிந்துள்ளது. அதனால் தான் அவரை அழைத்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன் என்றார் தாடி பாலாஜி.