Don't Miss!
- News தமிழ் தேசியத்திற்கே சிக்கல்.. பாஜகவின் அல்டிமேட் திட்டமே இதுதான்.. போட்டு உடைத்த திருமாவளவன்!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கருணாநிதி குடும்பத்தால் பல கோடி குடும்பங்கள் வாழ்ந்துள்ளது: மகத் உருக்கம்
Recommended Video
சென்னை: கருணாநிதியின் குடும்பத்தால் பல கோடி குடும்பங்கள் வாழ்ந்துள்ளது என்று மகத் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் 2 வீட்டில் கருணாநிதியின் புகைப்படத்திற்கு மாலை போட்டு வைத்திருந்தனர். புகைப்படத்திற்கு முன்பு போட்டியாளர்கள் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய மகத் கூறியதாவது
கலைஞர் தாத்தா
தமிழ் கடவுளுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் வணக்கம். தாத்தா, கலைஞர் தாத்தா, டாக்டர், தலைவர், கலைஞர் கருணாநிதி. அவரை நான் என்றுமே தாத்தா என்று தான் நினைத்திருக்கிறேன். என் நண்பர் தயாநிதி அழகிரி என்பது அனைவருக்கும் தெரியும். அவன் தாத்தாவை பற்றி நிறைய கதைகள் சொல்லியிருக்கிறான். தாத்தாவை பற்றி நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறான்.
சினிமா
தாத்தா 14 வயதிலேயே அரசியலுக்கு வந்து, கலையுலகிற்கு வந்தவர். சினிமாவையும், அரசியலையும் சப்போர்ட் செய்து, தமிழுக்காக போராடியவர். பள்ளிக்கே செல்லாத ஒரு மேதாவி. இன்று அவரை போன்று எழுத ஆளில்லை. நான்கு தலைமுறையை பார்த்திருக்கிறார், அதைவிட பெரிய சாதனை இருக்காது. அவரை போன்ற ஒரு தலைவர் இனி தமிழ்நாட்டில் திருப்பி இருப்பாரா இல்லையா என்று தெரியாது. ஆனால் இவர் வரலாறு படைத்துவிட்டு சென்றுள்ளார்.
தமிழ்நாடு
இந்த தலைமுறையில் நாமும் இருக்கிறோம் என்பதில் ரொம்ப பெருமைப்படுகிறேன். அந்த குடும்பத்துடன் தொடர்பில் இருந்திருக்கிறேன் என்பதற்கு நான் கொடுத்து வைத்தவன் என்றே சொல்ல வேண்டும். ரொம்ப சந்தோஷமாக இருக்கு. அவர் இறந்தது ரொம்ப கஷ்டமான விஷயமாக இருக்கிறது. அந்த குடும்பத்தால் தமிழ்நாட்டில் பல கோடி குடும்பங்கள் வாழ்ந்திருக்கு என்று மகத் உருக்கமாக தெரிவித்தார்.
பாலாஜி
இன்று தமிழ் நம்முடன் இல்லை. தமிழ் என்று சொன்னாலே நமக்கு அவர் நினைவு தான் வரும். அவர் இருந்த கால கட்டத்தில் நாமும் இருந்திருக்கிறோம் என்பதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அவர் நிறைய உழைத்துவிட்டார். அதனால் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று இறைவனுக்கு தெரிந்துள்ளது. அதனால் தான் அவரை அழைத்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன் என்றார் தாடி பாலாஜி.