நான் இருந்திருந்தால் கொலையே பண்ணியிருப்பேன்: கோபக்காரர் மகத்
Recommended Video

சென்னை: நான் இருந்திருந்தால் கொலையே பண்ணியிருப்பேன் என முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் மகத் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் 2 வீட்டிற்கு முன்னாள் போட்டியாளர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்று சென்றாயனும், கோபக்காரர் மகத்தும் வந்துள்ளனர்.
மகத் வந்துள்ள நேரத்தில் யாஷிகா அங்கு இல்லை.
கொலை
பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ள மகத் முன்பு அவரை போன்றே போட்டியாளர்கள் நடித்துக் காண்பிக்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. நல்ல வேளை நான் போயிட்டேன்னு நினைச்சேன். நான் இருந்திருந்தேன் என்றால் கொலையே பண்ணியிருப்பேன் என்று மகத் தெரிவித்துள்ளார்.

காதல்
நல்ல வேளை மகத் வரும்போது பிக் பாஸ் 2 வீட்டில் யாஷிகா இல்லை. இருந்திருந்தால் இருவருக்கும் சங்கடமாக போயிருக்கும். வெளியே சென்ற பிறகு மகத்துடன் காதலை தொடரலாம் என்று நினைத்த யாஷிகாவுக்கு இந்நேரம் அவர் பிராச்சியுடன் சேர்ந்துவிட்டது தெரிந்திருக்கும். அதனால் தான் தனித் தனியாக வந்துள்ளார்கள் போன்று.

பிராச்சி
பிக் பாஸ் 2 வீட்டில் தான் அவ்வளவு கோபப்பட்டிருக்கக் கூடாது என்று மகத் ஃபீல் பண்ணினார். எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்ததையும் அவர் ஒப்புக் கொண்டார். உண்மையை ஒப்புக் கொள்ளவும் தனி தைரியம் வேண்டும் மகத். அதற்காக அவருக்கு பாராட்டுக்கள். யாஷிகாவை காதலிப்பதாக கூறிவிட்டு வெளியே சென்றதும் மகத் பிளேட்டை மாற்றியது தனிக் கதை.
மும்தாஜ்
மும்தாஜ் ஆதரவாளர்கள் மண்டகசாயம் ரித்விகா மீது செம கடுப்பில் உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











