Don't Miss!
- News வெறுப்பு பிரச்சாரத்திற்கு சட்டத்தில் என்ன தண்டனை? தேர்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர்... போலீஸ் இன்ஸ்பெக்டர்.. நடுவில் மலர்...ஆஹா பிரமாதம்!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியல் வித்தியாசமான சூழலில் கதை பின்னப்பட்டு இருக்கு.
தான் திருமணம் செய்துகொள்ள இருக்கும் மலரிடம் கதிரேசன் செய்யும் காதல் குறும்புகளும், ரொமான்ஸும் ரசிக்கும்படி இருக்கிறது.
கதிரேசன்தான் சப் இன்ஸ்பெக்டர், இவனின் அப்பா ரிட்டயர்டு ராணுவ ஆஃபீசர்..இவங்க வீட்டுலதான் ஸ்பீச் தெரபிஸ்ட் மலர் மருமகளா போகப்போறா.
கிடைக்கறது பிடிக்கும் அவ்ளோதான்... இம்ப்ரஸ்ட் பிரியா பவானி ஷங்கர்
கதிர் மலர்
கதிர் மலரை பொண்ணு பார்க்க வரும்போதே அவனுக்கு பிடிச்சு போகுது. ஆனா,மலருக்கு போலீஸ் என்றதும் பயம் வந்துருது. காரணம் அவள் வாழ்க்கையில் ஏதோ மர்மம் இருக்கு. புருஷனாக போறவன்தான் போலீஸ் என்றால் மாமனார் ராணுவ அதிகாரி.
ரொமான்ஸ் மலரிடம்
மலரை ரொம்ப பிடிச்சு போயி அடிக்கடி வீட்டுக்கு வந்து வெளியில் அழைச்சுட்டு போறான் கதிர். என்னென்னவோ ரொமான்ஸ் செய்தும் மலர்கிட்டே இருந்து ஐ லவ் யூ சொல்ல வைக்க முடியலை கதிரைப் பார்த்தாலே பகீர்னு ஆகுது மலருக்கு.
பூஜா அத்தை பொண்ணு
கதிரின் அத்தை பொண்ணு பூஜாவுக்கு கதிரின் மேல ஆசை. ஆனா, கதிரின் ஜாதகப்படி அவனுக்கு ரெண்டாம்தாரம் அமையும்னு இருக்கறதுனால முதலில் மலரோட கல்யாணம் நடக்கட்டும், பிறகு அவளே வீட்டை விட்டு போயிருவா.. தான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு தன் அம்மா போட்டுகுடுத்த பிளானில் இருக்கா பூஜா.
எப்போ பூ மலரும்
பூ எப்போ மலர்றது..பொழுதெப்போ விடியறதுன்ற மாதிரி, முதல் கல்யாணம் நடந்து ஃபெயிலியர் ஆகட்டும்,அப்புறம் மாமா எனக்குத்தான்னு இருக்கா பூஜா.
எப்படி எல்லாம் கதையில டிவிஸ்ட் வைக்கறாங்கப்பா...