twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கல்யாணம் முடிவாயிருச்சு... இப்போ ஐ லவ் யூ சொல்லாம போனாதான் என்னவாம்....!

    |

    சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் வீட்டுக்குள்ளேயே கதையை கொண்டு போறதால பச்சை பசுமையை பார்க்க முடியலை.

    பங்களா வீடு மாதிரி ஃபீல் வந்து கிராமத்து களை மிஸ்ஸிங்... சின்னவருக்கு என்மேல் ஆசை இல்லேன்னு திடீர்னு ஒரு பையை எடுத்துக்கிட்டு தங்கச்சியோட கிளம்பறா முத்துச்செல்வி.

    அங்கே வந்த சவுந்தர்யா...கண்ணன் மாமாவுக்கு உன்மேல் கொள்ளை காதல்.. அதை குலதெய்வம் கோயில்ல வச்சு நான் நிரூபிக்கறேன்... அவர் வாயால ஐ லவ் யூ சொல்ல வைக்கறேன்னு சொல்றா

    கதை என்ன

    கதை என்ன

    கிராமத்துல சின்னவரு வாழ்க்கை...முத்துச்செல்வி பிழைக்க வந்த பொண்ணு...கல்யாணம் முடிவாயிருச்சு... இப்போ ஐ லவ் யூ சொல்லாம போனாதான் என்னவாம்.. கல்யாணம்தான் முக்கியம்.. கல்யாணத்துக்கு பிறகு ஐ லவ் யூ சொல்லிக்கறது... என்ன கதையோ என்னமோ...

    இரண்டு அக்காக்கள்

    இரண்டு அக்காக்கள்

    சவுந்தர்யாவின் அக்காக்கள் ரெண்டு பேரும் சேர்ந்துதான் முத்துச்செல்வி மீது பழிபோட லவ் லெட்டர் எழுதி வச்சாங்கன்னு தெரிஞ்சும் கண்ணன் கேட்கப்போனா அப்படித்தான் செய்வோம். எங்களுக்கு முத்துசெல்வியை கல்யாணம் பண்ணிக்கறது பிடிக்கலை... இன்னும் எதாவது செய்துக்கிட்டுத்தான் இருப்போம்னு சொல்றாங்க

    அக்கா வர்றாங்க

    அக்கா வர்றாங்க

    அக்கா வந்து என்ன சொல்றாரு சாருன்னு கேட்கறாங்க..அது ஒண்ணும் இல்லைக்கான்னு சொல்றான் கண்ணன். அம்மா மாமா சும்மா மூடி மறைக்கறாரு... நாங்கதான்மா முத்துசெல்விக்கு மாமா எழுதின மாதிரி லெட்டர் எழுதி வச்சோம். எங்களுக்கு மாமா முத்துசெல்வியை கட்டிக்கறதுல இஷ்டம் இல்லேன்னு சொல்றாங்க.

    சொல்லுக்கா நீயே

    சொல்லுக்கா நீயே

    அக்கா..அந்த புள்ள முத்துச்செல்வி வெள்ளந்தியான பொண்ணுக்கா...அவளைப் போயி எதுக்கு இப்படி அவமானப்படுத்தணும்.. பாவம் இல்லையாக்கா முத்துசெல்வின்னு கண்ணன் கேட்கறான். நான் பேசறதுல என்ன இருக்கு...எனக்கும்தான் முத்துசெல்வியை இவன் கல்யாணம் பண்ணிக்கறது பிடிக்கலை என்னத்தங்க சொல்றதுன்னு கணவர்கிட்ட அக்கா சொல்றாங்க.

    முடிவுதான் என்ன

    முடிவுதான் என்ன

    இதுக்கு முடிவுதான் என்ன விஜின்னு கேட்கறார் கணவர். குல தெய்வம்தாங்க இதுக்கு பதில் சொல்லணும்னு சொல்றாங்க விஜி. எப்படி விஜி சொல்றேன்னு அவர் கேட்க,வருஷா வருஷம் குல தெய்வத்துக்கு செய்ய வேண்டியதை செய்துக்கிட்டுத்தானே இருக்கோம்.

    முடிவு எதையும்

    முடிவு எதையும்

    முடிவு எதையும் குலதெய்வம் கோயிலில்தானே எடுப்போம். குலதெய்வம் கண்ணன் மேல வந்துதானே நாம கேட்கறதுக்கு பதில் சொல்லும். இப்பவுமப்படியே குல தெய்வம் கோயிலில் இவன் மேல சாமி வந்த உடனே முத்துச்செல்வி கூட கல்யாணம் நடக்கறது நல்லதா இல்லையான்னு கேட்போம்.அதுப்படி முடிவு செய்வோம்னு சொல்றாங்க

    என்னை நீ லவ்

    என்னை நீ லவ்

    அதுக்குள்ளே சின்னவரு முத்துச்செல்வி வீட்டுக்கு வர...அக்கா சின்னவரு வர்றாருக்கான்னு சின்னது சொல்லுது.ஆத்தி...சவுந்தர்யா அம்மா சொன்ன மாதிரி ஐ லவ் யூ சொல்லத்தான் வராரோன்னு சொல்றா முத்துச்செல்வி. சின்னவரு சின்னதை கொஞ்சம் வெளியில இருன்னு சொல்லிட்டு,நீ என்னை லவ் பண்றியா புள்ளேன்னு கேட்கறாரு

    சின்னது விளக்கமா

    சின்னது விளக்கமா

    முத்துச்செல்வி வெட்கத்துல இருக்க சின்னது உள்ள வருது... சின்னவரே நீங்க கேட்கறதுக்கு அக்கா பதில் சொல்லாது..நான்தானே சொல்லணும்னு முத்துச்செல்வி காப்பாத்தி வச்சிருந்த சின்னவரின் பொக்கிஷம் எல்லாத்தையும் காமிக்குது.சின்னவரு மெல்ட் ஆகறாருங்கோ...

    English summary
    The bungalow house model comes to mind and the villages are missing ... the little one is not the desire for me to take a bag and go to the house younger sister
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X