twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மதன் குமாரை வெறும் குமார்னு சொன்னதால பயபுள்ள எப்படி தப்பிச்சுக்குது....!

    |

    சென்னை: சன் டிவியின் மகாலட்சுமி சீரியல் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகுது. கிராமத்து கோயில் தர்மகர்த்தா வீட்டில் நடக்கும் கதை.

    வீட்டின் மூத்த மருமகள் மகாலட்சுமியிடம் கோயில் தர்மகர்த்தா பொறுப்பை ஒப்படைச்சது, தர்மகர்த்தாவின் தங்கச்சிக்கும், அவளின் வயசுப் பொண்ணுக்கும் பிடிக்கலை

    அப்புறம் என்ன அம்மாவும், கல்யாணம் ஆகாத அந்த பெண்ணும் சேர்ந்து மகாலட்சுமியை வீட்டை விட்டுத் துரத்த திட்டம் போடறாங்க.

    மதன் குமார் ஐராவதி

    மதன் குமார் ஐராவதி

    ஐராவதி மகன்தான் மதன் குமார்.இவன் கட்டிட பொறியாளர் படிப்பு படிச்சவன்.ஊர் ஊராக போயி இந்த வேலைகளில் ஈடுபட்டு வருகையில், கிராமத்தில பார்வதி என்கிற பெண்ணை காதலிச்சு கல்யாணம் செய்துகொள்வது போல நடிச்சு பார்வதியை அடைஞ்சுடுறான்.

    குமார் பார்வதியிடம்

    குமார் பார்வதியிடம்

    பார்வதியிடம் தன் பேரு குமார்னு மட்டும் சொல்லி வரும்போது கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிட்டு வருவேன்னு பொய்யா சொல்லிட்டு ,ஊருக்கு கிளம்பறான்.மதுரை சொந்த ஊரு... அம்மாகிட்ட சொல்லி உன்னை கல்யாணம் செய்துக்கறேன் பார்வதின்னு சொல்லிட்டு போனவன்தான்...

    பார்வதி குழந்தை

    பார்வதி குழந்தை

    பார்வதி குழந்தை உண்டாகிறாள்...கிராமத்து கோயிலுக்கு போன மகாலட்சுமிக்கு,பார்வதி உதவி செய்ய, பார்வதிக்கு குமாரை கண்டு பிடிக்க உதவி செய்வதாக மகாலட்சுமி மதுரைக்கு அழைச்சுட்டு வர்றா. மாமனாரின் தங்கை வீட்டில் தங்க வைக்க, இவங்க ஐராவதியிடம் சொல்லிடறாங்க.

    இப்போதுதான் விஷயமே

    இப்போதுதான் விஷயமே

    விஷயமே இப்போதுதான் தெரியுது..ஐராவதிக்கு பார்வதியை மகன் கெடுத்து, அது இப்போ குழந்தை வயித்துல வளரும் அளவுக்கு வந்திருக்குன்னு. அம்மா மதனைத் திட்ட, அம்மா நான் அவகிட்ட மதன் குமார்னு சொல்லலை... வெறும் குமார்னு சொன்னதால தப்பிச்சேன்னு சொல்றான் மகன்.

    நாத்தனார் மகாலட்சுமி

    நாத்தனார் மகாலட்சுமி

    மகாலட்சுமியின் நாத்தனாரை மதனுக்கு கல்யாணம் பேசி முடிச்சு வச்சு இருக்கற இந்த நேரத்துல பார்வதியை இங்கே இருக்கவிடக் கூடாதுன்னு ஐராவதி, அம்மா, பொண்ணு இவங்க மூணு யோசிச்சு ஊரை விட்டு அனுப்பி வைக்கறாங்க.

    நல்லவன் இல்லை

    நல்லவன் இல்லை

    குழந்தையை கருக்கலைப்பு செய்ய பார்வதிக்கு தெரியாமல் நடிக்க வந்த மாமனார்,, மாமியார் முயற்சிக்கையில்தான்..குமார் கெட்டவன்னு தெரியுது பார்வதிக்கு. மதன் குமாரா மகாலட்சுமி வீட்டுக்கே வந்து போற மாப்பிள்ளை மதன் குமார்தான்,தனது தங்கையை ஏமாத்தின குமார்னு இன்னும் தெரியலை.

    மதன் குமார் வெறும் குமார்னு சொல்லி பயபுள்ளஒரு பொண்ணை கெடுத்து, வயித்துல புள்ளையையும் கொடுத்து எப்படி எல்லாம் தப்பிக்குது பாருங்க...

    English summary
    Sun TV's Mahalakshmi airs at noon The story of the village temple Dharmakarta home.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X