Don't Miss!
- Finance பெங்களூரு தண்ணீர் பிரச்னைக்கு இது தான் தீர்வு.. ஆனா மக்கள் ஏற்க மாட்டேங்கிறாங்க..!
- Technology எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 200MP கேமரா.. 66W சார்ஜிங்.. ஹானர் போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.. எந்த மாடல்?
- Automobiles இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
- Lifestyle Today Rasi Palan 23 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப் பெரிய நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது...
- News கடலூர் பெண் கொலை பற்றி அவதூறு.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீஸ் வழக்குப்பதிவு
- Sports ரஹானே தொடக்க வீரராக மாறியது ஏன்? சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் மாற்றம் வருகிறது.. மைக்கில் ஹஸி கருத்து
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எனக்கு யாருமே இல்ல, எதுவுமே கிடைக்கல, குமுறி அழுத மோகன் வைத்யா: வீடியோ இதோ
சென்னை: அதான்ன பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கி இன்னும் யாருமே அழவில்லையே என்று பார்த்த நிலையில் மோகன் வைத்யா கண்ணில் தண்ணி வச்சுண்டார்.
பிக் பாஸ் 3 போட்டியாளர்களில் மோகன் வைத்யாவும் ஒருவர் என்று தெரிந்த ரசிகர்கள் அய்யோ அவர் வேண்டாமே, வயதான காலத்தில் எதையும் செய்ய முடியவில்லை என்று சொல்லி மொக்கை போடுவார் என்றார்கள்.
ரசிகர்கள் நினைத்ததற்கு நேர் எதிராக உள்ளார் மோகன் வைத்யா. காலையில் எழுந்த உடன் அதுவும் சாண்டி மாஸ்டருடன் சேர்ந்து டான்ஸ் ஆடுகிறார், நன்றாக சமைக்கிறார், அனைவரிடமும் ஜாலியாக பேசுகிறார்.
|
மோகன் வைத்யா
பிக் பாஸ் வீட்டில் எனக்கு பாசம் கிடைக்கவில்லை, சொந்தம் இல்லை என்று யாராவது அழுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இந்நிலையில் பாசம் கிடைக்கவில்லை, எதுவும் நிலையாக கிடைக்கவில்லை, அதனால் தான் இதிலாவது ஒரு குடும்பம் கிடைக்கும் என்று ஆசைப்பட்டு வந்தேன், எனக்கு இதெல்லாம் சொல்லி அழக் கூட மனுஷாள் கிடைக்கவில்லை என்று மோகன் அழுதார். அதை கேட்ட தர்ஷன் தன்னை மகனாக நினைக்குமாறு கூறுவது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
அழுகை
ப்ரொமோ வீடியோக்களில் தொடர்ந்து யாராவது இரண்டு பேர் இடையே மோதல் போன்று காட்டுவதால் ஒரு மாற்றத்திற்காக அழுகாச்சி வீடியோவை வெளியிட்டுள்ளார்கள் போன்று. இதை எல்லாம் நாங்க பிக் பாஸ் 1ல் பார்த்துவிட்டோம். வையாபுரி அழுததை இன்னும் நாங்க மறக்கவில்லை பிக் பாஸ்.
|
நடிப்பு
எனக்கு யாருமே இல்லையே என்று மோகன் வைத்யா அழுதபோது சித்தப்பு சரவணன் கொடுத்த ரியாக்ஷன் இது. என்னமா நடிக்கிறான்யா என்பது போன்று அவர் பார்த்தார். சரவணனிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம். ஆனால் மனிதர் இன்னும் தனது ஆட்டத்தை துவங்கவில்லை. வீ ஆர் வெயிட்டிங் சித்தப்பு.
|
ரசிகர்கள்
பிக் பாஸ் 3 போட்டியாளர்களுக்கு மட்டும் தான் முதல் நாளே காதல் வருமா, ரசிகர்களுக்கும் முதல் நாளே சலிப்பு வந்துவிட்டது. மாத்தி யோசிங்க பிக் பாஸ், முடியல. மொக்கை ஜாஸ்தியாக இருக்கிறது. இன்னும் எத்தனை நாள் தான் வனிதாவை க்ளோசப்பில் காட்டி, லாஸ்லியாவை ஆட விட்டு எபிசோடை ஓட்டுவீர்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.