Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இனிமே யார் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார்? பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்டார் மோகன் வைத்யா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இசைக்கலைஞர் மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் மோகன் வைத்யா. வந்த முதல் நாள் மனுஷர் நல்லவராகதான் தெரிந்தார்.
போக போகத்தான் புரிந்தது அவருடைய சுயரூபம். முதலில் சென்டிமென்ட்டாக பேசி எல்லோரையும் கவர் செய்தார். ஹவுஸ் மேட்ஸ்களும் அவரை டாடி டாடி என்றே அழைத்து வந்தனர்.
சின்ன விஷயம்
ஆனால் அடிக்கடி சம்பந்தமே இல்லாமல் கோபப்பட்டு வந்தார் மோகன் வைத்யா. சின்ன சின்ன விஷயத்தையெல்லம் பேசி பெரிதாக்கி பிரச்சனை செய்துவந்தார்.
கட்டிப்பிடித்து முத்தம்
பின்னர் வீட்டில் உள்ள பெண் ஹவுஸ் மேட்ஸ்களை கட்டிபிடித்து முத்தம் கொடுப்பதை விரும்ப தொடங்கிவிட்டார். ஏதாவது ஒரு சின்ன பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டு கண்ணை கசக்கி ஹவுஸ்மேட்ஸின் அனுதாபத்தை பெற முயற்சித்து வந்தார்.
ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை
அழும் அவரை சமாதானப்படுத்தும் பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சமாதானமாகிவிடுவார் மோகன் வைத்யா. அவர் பெண் ஹவுஸ்மேட்ஸ்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தது கொஞ்சமும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.
புரணி பேச்சு
பெண் ஹவுஸ் மேட்ஸ்கள் மீது கையை வைத்து தடவுவதையும், அவர்களை கன்னாபின்னாவென கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதையும் ரசிகர்கள் சுத்தமாக விரும்பவில்லை. பெண்களை போல் புரணி பேசுவதையும் ஒரு சார்பாக நடப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார் மோகன் வைத்யா.
தூக்கிய மக்கள்
இதனால் அவரை முதலில் வெளியேற்றுங்கள் என மக்கள் போராட்டம் நடத்தாத குறையாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் எவிக்ஷனுக்கு வந்த அவரை மிகக் குறைந்த வாக்குகளை மட்டுமே அளித்து தூக்கிவிட்டனர் மக்கள்.
வருத்தப்பட்ட மூன்று பேர்
பிக்பாஸ் வீட்டில் இருந்து போகும்போதுகூட எல்லோரையும் கட்டியணைத்த மோகன் வைத்யா, மீரா, சாண்டி, கவின் ஆகியோரை கட்டிப்பிடிக்காமல் புறக்கணித்தார். இதனால் மிகவும் வருத்தப்பட்டனர் அந்த மூன்று பேரும்.
இவ்வளவுதான் மோகன்
இதைத்தொடர்ந்து கமலை சந்திக்க மேடைக்கு வந்த மோகன் வைத்யா, அப்படியே தலைக்கீழாக மாறிவிட்டார். இவரா உள்ளே அப்படி அழுதார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார். இவ்வளவுதான் மோகன் வைத்யா.